Wednesday, October 15, 2014

யார் முதியவர்கள்- முதியோர் தினம் சார்ந்து ஒரு பகிர்வு



Shameela Yoosuf Ali


யார் முதியவர்கள் என்பது பற்றி இன்னும் சரியான தெளிவில்லை.


பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் ‘வயதாவதின் சமூகவியல்’

(Sociology of Ageing) என்றோர் நூல் இருக்கிறது.நான் அடிக்கடி விரும்பி நுகரும்

புத்தகம் அது.


அந்த நூல் சொல்கிற சில விடயங்கள் மிகச் சுவாரசியமானவை.உலகின் 70

வயது தாண்டியவர்களில் 70 வீதமானவர்கள் தங்களுக்கு வயதாகி விட்டது
என்பதை ஏற்றுக் கொள்வதில்லையாம்.நோய்கள் இல்லையெனில் 80 வயது வரை மனித உடல் தளர்ச்சி கொள்ளாமல் உறுதியோடு இருக்கும்;நோய்களே இல்லாத போதும் 80 வயதுகளைக் கடக்கும் போது முதுமைக்கான பலவீனம் உடலில் தோன்ற ஆரம்பிக்கும் என்று இன்னோர் ஆய்வு சொல்கிறது.


உற்றுப் பாருங்கள்.எண்பதுகளிலும் இருபதுகளின் துடிப்போடு இருக்கும் வயதான இளைஞர்களும்,இருபதிகளிலேயே எண்பதின் களைப்போடு இருக்கும் இளைய முதியவர்களையும் நம்மத்தியில் ஏராளமாகக் காணலாம்.


வயதுத்துவம் Ageism எனப்படுவது தனிநபர்கள் அல்லது குழுக்களை அவர்களது வயதை அடிப்படையாக வைத்து ஒரே மாதிரியானவர்களாக அல்லது ஒரே இயல்பைக் கொண்டவர்களாக அடையாளப்படுத்துவதும் ,வயதை மையமாக வைத்து அவர்களுக்கு பாகுபாடு காட்டுவதுமாகும்.இந்தச் சொல்லை ரொபர்ட் நீல் பட்லர் எனும் சமூகவியலாளர் 1969 இல் வயதானவர்களுக்கெதிரான வேறுபாடுகளை விவரிக்கப் பயன்படுத்தினார்.


உயிரியல் வயது என்பது முழுக்க முழுக்க உடல்சார்ந்தது.ஆன்மாவுக்கு வயது கிடையாது.இதை மிகச் சிலரே புரிந்து கொள்கிறார்கள்.


சிலருடன் சம்பாஷித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு உங்கள் வயது என்ன என்று தெரிந்தாக வேண்டும்;அதை விதவிதமான வழிகளில் கேட்டு வைப்பார்கள்;புரிந்தும் புரியாதாது போன்று கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கும்.


முதுமை அழகானது, ஆழமான அனுபவங்களால் ஆளப்படுவது.நரைத்த முடிக்கு சாயம் தடவுவார்கள் சிலர்;பிழை இல்லை.வெண் கூந்தலை கம்பீரமாகக் கருதுவார்கள் இன்னும் சிலர்.


அந்தந்த வயதுகளுக்குரிய நிறைந்த சிறப்பம்சங்கள் இருக்கின்றன.அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டாலே வாழ்க்கை அற்புதமாகி விடும்.


மனது அதை நினைக்கிறதோ அதாகவே ஆகி விடுகிறோம்.


சிறகு கட்டிப்பறக்கும் மனசுக்கு வயசில்லை.


சாதிக்க நினைக்கும் காட்டருவிகள் தடைகளை உடைத்துக் கொண்டு புதிய பாதைகளில் பயணிக்கின்றன.


ஆமாம், உங்கள் வயது என்ன?


2014 October 1st
by Shameela Yoosuf Ali

Thursday, July 10, 2014

சின்ன உழைப்பாளிகள்- என் நோன்பு கால டயறி


Shameela Yoosuf Ali

தலையில் சுமக்க முடியாமல் கார்ட் போர்ட் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நோன்புகால பின் அஸர் பொழுதுகளிலே அந்தச் சிறுவர்களிருவரும் வருவார்கள்.

படீஸ் ரோல்ஸ் இந்த இரண்டும் பெட்டிகளுக்குள் கவனமாக அடுக்கப் பட்டிருக்கும்.பத்து ரூபாய் படீஸும் பதினைந்து ரூபாய் ரோல்ஸும் சுட சுட கொண்டு வரும் அந்த மெலிந்த ஆகிருதிகளைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாயிருக்கும்.குழந்தைப் பருவத்தை சில பிஞ்சுகள் மிக அவசரமாகத் துறக்க நேரிடுகிறது.

இருவருமே பாடசாலையில் படிக்கிறார்கள்,
நோன்புகாலங்களில் வீட்டில் செய்து தரும் உண்டிகளை விற்றுக் கொடுக்கிறார்கள்.வெள்ளையும்சொள்ளையுமாய் இவர்கள் வயதொத்த சிறுவர்கள் பள்ளிவாசல்களிலும் பாதை விளையாட் டுக்களிலும் ஈடுபட்டிருக்க கருமமே கண்ணாய் தெருவோரம் தலைச் சுமை கனக்க சென்று கொண்டிருப்பார்கள்.

நோன்பு அல்லாத காலங்களில் மாலை வேளைகளில் சோப்புடப்பா,சீப்பு,பிளாஸ்டிக் பாத்திரவகைகள் கொண்டு வருவார்கள்.தேவைகள் இல்லாத போதும் சமயங்களில் வாங்கி அந்த உழைப்பை பாராட்டத் தோன்றும்.

நாவூற வைக்கும் சுவை இல்லாத போதும் அந்தப் படீஸையும் ரோல்ஸையும் வாங்குவதும் அதே உழைப்புக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பதற்காகத் தான்;அதற்கு மேலால் அனுதாபங் கலந்த அன்பும் இல்லாமலில்லை.

இப்போது அந்தச் சிறுவர்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டார்கள்.

கடைக்குப் போகவே தன்மானம் பார்க்கும் அவர்கள் வயதொத்த இளவயதினருக்கிடையே இவர்களிருவரும் வித்தியாசமாகத் தெரிவார்கள்.

இளமையில் வறுமை என்பது கொடுமையான விஷயம் தான்.

எனினும் நிரம்பவே யோசிக்கும் போது இந்தச் சிறுவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணந்தோன்றுகின்றது.

நிறையச் சாதித்தவர்கள் சிறுவயதில் கடின உழைப்பும் கஷ்டங்களிலும் வளர்ந்தவர்கள்.துன்பங்கள் இவர்களைச் செதுக்குகின்றன.

அவமானம்,வலி இவைகளையெல்லாம் எதிர்கொள்ளும் துணிவு இவர்களிடம் வளர்கிறது.இவர்கள் சாதிக்கட்டும் என்று நெஞ்சாறப் பிரார்த்திக்கிறேன்.

இப்போதைக்கு நம் கடமை நம் அயலில் இவ்வாறான சிறு செடிகள் விருட்சமாய் வளரத் துடித்துக் கொண்டிருக்கலாம்;துளி தண்ணீர் விடுங்கள்.

சமூகம் என்ற வகையில் இப்படியான சின்ன உழைப்பாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடப்பாடு நம் மீது நிறையவே இருக்கிறது.

அந்த யூத சகோதரனும் நாமும் -என் நோன்பு கால டயறி


பலஸ்தீனம்…நபிமார்களின் கால் பதிந்த பூமித்துண்டு.

உலக வரலாற்றில் தொடர்ந்தேர்ச்சியாக அநியாயத்துக்குள்ளாக்கப்பட்ட ஒரே நாடு.

ஒரு காலத்தில் பழங்களும் பூக்களுமாய் ஒரு சொர்க்கத்தின் மிச்சமாய் இருந்த நிலம்.

முஸ்லிம்களின் முதல் கிப்லா பைதுல் முகத்திஸ்ஸினைத் தாங்கி நிற்கும் பேறு பெற்ற பெரும் பூமி.

தளிராய் துளிர்க்க முன்னரே குர்ஆன் சுமக்கும் பிஞ்சுக்கள்.
உழைத்து உழைத்து சிவந்து கன்றிப்போன அன்னையர் கரங்கள்.

துப்பாக்கிச் சப்தங்களோடு பள்ளிக்கூடத்தின் இடிந்த சிதிலங்களில் கற்கும் மாணவர்கள்.

நெஞ்சுரமும் அமைதியும் கொண்ட மனிதர்கள்.

தம் தாய் பூமியிலே அகதிகளாக்கப்பட்டு,சொல்லொணாத் துன்பங்களுக்கும் துயரங்களுக்குமுள்ளாகி,
விரட்டப்பட்டு,கைதிகளாக்கப்பட்டு இன்று வரை நீதி கிடைக்காத பலஸ்தீனர்கள் இறுதி வரை தம் போராட்டத்தைத் தொடரும் திடம் வியக்க வைக்கிறது.

அல்லாஹ்வை உள்ளத்தில் சுமந்தவர்கள்;துப்பாக்கிக் குழலுக்கு மேலால் தைரியமாய் நெஞ்சுயர்த்தி நடப்பவர்கள்.

கால்பந்தாட்டம் பார்த்து நாமெல்லாம் களித்துக் கொண்டிருந்த போது காஸாவில் உயிரோடு சிறுவர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்.

கால்பந்தாட்டம் தேவை தான்; அதே நேரம் பலஸ்தீன் எனும் துயரம் எங்கள் இதயம் பிராண்டவில்லையெனில் நாங்கள் உயிருள்ள சடங்கள் மட்டுமே.

பலஸ்தீனப் போராட்டம் நீதியின் போராட்டம்.
நசுங்கிய தன்மானத்தை மீட்டெடுக்கும் போராட்டம்.

இஸ்ரேலில் இருந்து கொண்டே பலஸ்தீனப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஒரு யூத சகோதரனை நீண்ட காலமாய் நான் அறிவேன்.இஸ்ரேலின் அழிவை இஸ்ரேலுக்குள்ளிருந்தே எழுத ஒரு குழு நிச்சயமாய்க் கிளம்பி வரும்.

பலஸ்தீனப் போராட்டத்தை அங்கீகரிக்கும்
முஸ்லிம் உம்மத்தின் ஓரங்கம் என்ற வகையில் எங்களது பொறுப்பு இன்னும் பாரமாயிருக்கிறது என்பதை அந்தச் சகோதரனின் பங்களிப்பு எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.

நீளும் நோன்பிலும்,இப்தார் வேளைகளிலும்
ஒவ்வொரு தொழுகையிலும் பலஸ்தீனத்து சொந்தங்களை கொஞ்சமாவது எண்ணிப்பாருங்கள். உயிரோட்டமான துஆக்கள் உயிரின் ஆழத்திலிருந்து வரட்டும்.

உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள்;பலஸ்தீனத்துக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்;இப்போதே,மிக அவசரமாகத் தேவைப்படுகிறீர்கள்.

நீங்கள் தயாரா?

By Shameela Yoosuf Ali

2014.July 9th
#ரமழான் #பலஸ்தீனம் 

உளம் தொடும் ஒரு கதை!


Shameela Yoosuf Ali


இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன்.
தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது.
உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன்.

நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன்.
திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன்.
இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது.
எல்லாப்பக்கம் சன சமுத்திரம்.
நான் எங்கே நிற்கிறேன்.சிலர் ஓரிடத்தில் விறைத்து நிற்கிறார்கள்.சிலர் அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள்.

சிலர் முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறார்கள்.
பயம் என்னைப் பிய்த்துத் தின்னத்துவங்கியது.நான் எங்கிருக்கிறேன் என்பதை சர்வ நிச்சயமாய் உணர்ந்து கொள்கிறேன்.இதயம் நெஞ்சாங்கூட்டிலிருந்து எகிறி வெளியேறத்துடிக்கிறது.
இது இறுதித்தீர்ப்பு நாள்.

நான் உலகத்தில் இருந்த போது இந்த நாளைப்பற்றி எவ்வளவெல்லாம் கேட்டிருப்பேன்,வாசித்திருப்பேன்.ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இந்த நாள் வரும் என்று நினைக்கவில்லையே!!!
ஒரு வேளை இதெல்லாம் வெறும் பிரமையோ?

இல்லை,இல்லை இதெல்லாம் நிஜமாகவே இருக்கிறது.இந்தப் பயம்…..இதுவரை நான் வாழ்நாளில் உணர்ந்ததில்லை.
எனது பெயரைக் கூப்பிட்டு விட்டார்களா என்று ஒருவர் இருவரிடம் பதட்டத்தோடு கேட்டபடி கூட்டத்தோடு நானும் நகர்கிறேன்.
திடீரென என் பெயர் அழைக்கப்படுகிறது.

ஆமாம்,என் பெயரே தான்.என் தந்தையின் பெயர் கூட சரியாக இருக்கிதே.
இந்த சனசமுத்திரம் அப்படியே பிளந்து எனக்கு வழிவிடுகிறது.
இரண்டு மலக்குகள் என் தோளிரண்டையும் பற்றுகிறார்கள்.சந்தேகம் நீங்காத கண்களோடு நடக்கிறேன்.

மலக்குகள் என்னை நடுவில் அமர்த்தி விட்டு நகர்கிறார்கள்.என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னே ஓடுகிறது ஒரு திரைப்படம் போல்.தலையைக்குனித்துக்கொள்கிறேன்.

திடீரென என் கண் முன்னே இன்னொரு உலகம் காட்டப்படுகிறது.அங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள்.

எனது தந்தை ஒரு சமூக சேவையிலிருந்துஇன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்.அவரது செல்வம் அல்லாஹ்வுடைய பாதையில் செலவளிக்கப்படுகிறது.

எனது உம்மா வீட்டிற்கு வரும் ஏழைகளுக்கு அள்ளி வழங்குகிறார்.விருந்தாளிகளுக்கு உணவளிக்கிறார்.
நான் கெஞ்சுகிறேன்.

நானும் அல்லாஹ்வுடையபாதையில் தான் இருந்தேன்.
மற்றவர்களுக்கு உதவினேன்.
அல்லாஹ்வுடைய தீனை மற்றவர்களுக்கு எத்தி வைத்தேன்.
எனது தொழுகைகளை நிறைவேற்றினேன்
ரமழானில் நோன்பு நோற்றேன்.
அல்லாஹ் சொன்னவற்றைச் செய்தேன்.
வேண்டாம் என்று சொன்னவற்றிலிருந்து தவிர்ந்து கொண்டேன்.
நான் எவ்வளவு அல்லாஹ்வை நேசித்தேன் என்பதை நினைத்து நான் விம்மி விம்மி அழத்துவங்கினேன்.

நான் உலகில் எதைத் தான் செய்திருந்தாலும் அது மிகக்குறைவே என்பதை அந்த நிமிடம் உணர்ந்தேன்.அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக அறிந்து கொண்டேன்.வியர்வை முன்னெப்போதும் இல்லாதளவு பெருகி வழிய நான் நடுநடுங்கினேன்.
கடைசித்தீர்ப்பை எதிர்நோக்கிய என் கண்கள் மீஸான் தராசில் நிலைகுத்தி நின்றன.

இதோ தீர்ப்பு.
நரகிற்கு செல்வோரின் பெயர்கள் வாசிக்கப்படுகின்றன.
இறைவா…….
என் பெயரும் வாசிக்கப்படுகிறது.
நான் முழங்காலில் விழுந்தேன்‘என்னால் முடியாது.இங்கே ஏதோ தவறு நடந்திருக்கிறது.நான் எப்படி நரகம் போக முடியும்” என்று கத்திக்கூச்சலிட்டேன்.தலை சுற்றியது.கண்களில் ஒளி மங்கியது.

மலக்குகள் இருவர் என்னை கொழுந்து விட்டெரியும் நரகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

என் கால்கள் கரடுமுரடான தரையில் இழுத்துச்செல்லப்படுகின்றன.
நான் சப்தமாக அழைக்கிறேன்.

“உதவுங்களே யாராவது”

எனது நற்செயல்களை அழைக்கிறேன்.ஓதிய குர் ஆனை,தொழுகைகளை அழைக்கிறேன்.

ரசூல் (ஸல்) அவர்களின் மணிமொழி ஞாபகத்துக்கு வருகிறது.ஐந்து முறை ஆற்றில் குளித்தால் உடம்பு சுத்தமடைவதைப்போல ஐவேளைத்தொழுகை பாவங்களை அழித்து விடுகிறது.
அழத்தொடங்கினேன்.
எங்கே என் தொழுகை?

எங்கே என் தொழுகை?
எங்கே என் தொழுகை?
மலக்குகள் நிற்கவில்லை;என் கதறலைக்காதில் போட்டுக்கொள்ளவுமில்லை.

நரகத்தின் சுவாலைகளின் வெப்பம் என் முகத்தை எரிக்கிறது.ஒரு முறை நம்பிக்கையின்றித் திரும்பிப்பார்க்கிறேன்.ஒரு மலக்கு என்னைப்பிடுத்து நெருப்புக் குண்டத்தில் தள்ளி விடுகிறார்.ஆவென்று கத்திக்கொண்டே நான் கீழே விழுகிறேன்.ஐந்தாறு அடிகள் விழுந்த பின் ஒரு கரம் என்னைப்பற்றி இழுக்கிறது.

தலையை உயர்த்திப்பார்க்கிறேன்.வெள்ளைத் தாடியுடன் ஒரு முதியவர்.

“நீங்கள் யார்?’

“நான் தான் உனது தொழுகை”

“ஏன் நீங்கள் இவ்வளவு தாமதித்து வந்தீர்கள்..இன்னும் கொஞ்ச நேரத்தில் நரகம் என்னை விழுங்கியிருக்குமே” ஆதங்கத்தோடு சொன்னேன்.
முதியவர் சிரித்தார்.”நீ எப்போதும் கடைசி நேரத்தில் தான் நிறைவேற்றினாய்,மறந்து விட்டாயா?

ஒரு நொடி…
நான் விழித்துக்கொண்டேன்,சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினேன்.
என் தாயும் தந்தையும் உரையாடுவது கேட்கிறது.
என் உடை வியர்வையில் குளித்திருக்கிறது.
அல்லாஹு அக்பர்!

அல்லாஹு அக்பர்!
இஷாவிற்கான அதான்.
உடனே எழுந்து வுழூ செய்வதற்காகச் சென்றேன்.

—-ஆங்கிலக்கதையின் தழுவல்- தமிழில் சமீலா யூசுப் அலி

Saturday, July 5, 2014

சிறுவர்களின் ரமழான் 1


Shameela Yoosuf Ali

காய்ந்து போன கட்டாந்தரை மனங்களெல்லாம் இளகி பச்சையும் மஞ்சளுமாய் பூத்திக்குலுங்கும்கரிசல் நிலங்களாக, வஹிக்குளிர் சுமந்து வருகிறது ரமழான்.

ஒரு முஸ்லிமின் பாதையில் ரமழான் குறுக்கிடும் கணங்கள் அபூர்வமானவை.ஆயிரம் மாதங்களை விட அதிகமான நாட்களை உள்ளிருத்தி வரும் ரமழான் எங்களிடம் தங்கப்போவதென்னவோ ஆங்கிலக் கலண்டரின் படி ஒரே மாதம் தான்.

இலங்கையைப் பொறுத்தளவில் ரமழான் மாதம் பாடசாலை விடுமுறை காலம்.ரமழானில் சிறுவர்களை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி பல அன்னையரை இப்போதே குடைந்தெடுக்கத் தொடங்கியிருக்கும்.பிஞ்சு உள்ளங்களில் அல்லாஹ்வை எழுதவும் தேவதைக்கதைகளிலிருந்து சிந்தனைகளை மேலே உயர்த்தவும் ஆக்கத் திறனை நெறிப்படுத்தவும் அருமையான சந்தர்ப்பம் இது.சிறுவர்கள் எனும் போது 2 வயதிலிருந்து 14 வரையிலான பல்வேறு கட்டங்களிலுள்ள அனைவரையும் குறிக்கும்.கீழே குறிப்பிடப்படும் செயற்பாடுகளை அவரவர் வயதிற்கேற்றவாறு இலகுபடுத்தவோ அல்லது கொஞ்சம் தரப்படுத்தவோ இயலும்.

ரமழானுக்கொரு வரவேற்பு

ரமழானை வரவேற்க வீடுகளை ஆயத்தப்படுத்தும் வழமை எமது கடந்த தலைமுறையினரின் எழுதப்படாத சட்டம்.முஸ்லிம்களின் வாழ்க்கையில் ரமழான் மிக முக்கியமானதொரு காலம் என்பதை சிறுவர்களுக்குப் புரிய வைக்கவும் நிறைந்த மனதோடு ரமழானை வரவேற்கவும் சில செயற்பாடுகளை நாம் ஒழுங்கு செய்யலாம்.

அறைகளை ஒழுங்குபடுத்தி தேவையற்ற பொருட்களை அகற்றி தூசு தட்டி வீட்டைக் கழுவும் போது சிறுவர்களை அவர்களுக்குடைய வயதுக்கேற்ற அமைப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.வீட்டின் முன்னால் ‘ரமழானே உன்னை வரவேற்கிறோம்’ என்ற வாசகம் (ஆங்கிலம் அல்லது அறபு மொழிகளைலும் இது அமையலாம்) தாங்கிய ஒரு சின்ன ‘பேனர்’ஐ சிறுவர்களுக்கு செய்யச் சொல்லுங்கள்.

இது ஒவ்வொருவரின் கற்பனைத் திறனுக்குமேற்ப துணியில் அல்லது வெள்ளை நிற அல்லது வேறு நிறத்தாள்களில் அமையலாம்.ஷஃபான் மாத இறுதிப்பகுதியிலிருந்து இந்த பேனரை உங்கள் வீட்டு வாசல்களில் தொங்க விடலாம்.இது சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ரமழானை எதிர்பார்த்திருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்த துணையாகும்.

தொடரும்...

2011

Friday, July 4, 2014

ஏழையும் எளிமையும் – என் நோன்பு கால டயறி


Shameela Yoosuf Ali

ரமழான் தூங்கிய இதயங்களை தட்டியெழுப்பி இயங்கச் செய்ய வந்ததோர் இனிய கரம்.

ரமழானின் நன்மைகளின் உள்ளீடு.

ஒட்டிய வயிறுகளின் சோகம் அறிய இறையவன் தந்ததோர் அனுபவப் பயிற்சி.

இறைச்சிக் கஞ்சி,அகம் குளிர பாலுதா,எண்ணெய்யில் பொரித்தெடுத்த இரண்டு மூன்று வகை சிற்றுண்டிகள்,பேருக்கு ஈத்தம் பழம்,வகை வகையான பழசாலட்கள் இன்னோரன்னவை.

இரவுச் சாப்பாடு அவித்தெடுத்த இடியப்பம்,கிழங்குச் சொதி இறைச்சி ஆணம் கமகமக்க சின்ன மிளகாய் அரைத்த சம்பலுடன் உள்ளிறங்கும்.சூடாயொரு கோப்பி வேறு.

சஹர் நேரமோ தாளித்த சோறு,சீரகம் மணக்கும் கோழிக்கறி,வதக்கிய மரக்கறி,மணக்கும் பருப்பு,பொரித்த இறைச்சி இன்னும் இன்னும் பட்டியல் நீளும்.தயிரில்லாமால் சஹர் உணவு செரிக்குமா.வெண்ணெய்யாய் உருகும் தயிருக்கு மேல் கித்துள் பாணி விட்டு வாழைப்பழமும் வெட்டிப்போட்டு உண்ணும் கலை.ஏப்பம் விட்டுக் கொண்டே இன்னுமொரு ஏலக்காய் டீ.

ஏழைகளில் பசியறியும் மாதம் என்று யார் சொன்னார்கள்?
விதவிதமாய் புசிப்பதற்கல்லவா பழகி வைத்திருக்கிறோம்.

மாத இறுதியில் செலவும் இடிக்கும்;மற்ற மாதங்களை விட செலவு இருமடங்கு; குடும்பத்தலைவர் தலையில் அடித்துக் கொள்ளாத குறை.

நோன்பு வைத்து இரண்டு சுற்றுப் பெருத்துப் போன உடல்களை கண்ணாடியில் பார்த்து ஏங்கிக் கொள்ள வேண்டியது தான்.

அடர்த்தியான் சாப்பாடு அதிக தூக்கத்தைக் கொண்டு வரும்.உடல் களைத்துப் போக அல்லாஹ்வுக்காய் நின்று வணங்கலும் நீளமாய் ஓதலும் சோர்வைக் கொண்டு வரும்.

உற்சாகமாய் செய்திருக்க வேண்டிய பணிகள் எல்லாம் மந்தகதியுடன் நகரும்.

மாற்றம் எங்கள் வீட்டிலிருந்து தான் ஆரம்பமாக வேண்டும்.

எளிமையான இப்தார்.

பசி போக்கும் அளவு மட்டுமேயான இரவுணவு;பசிக்காதவர்கள் இரவுணவை தள்ளி வைக்கலாம்.

எண்ணெய்யும் வெண்ணெயும் மிதக்காத அளவான ஸஹர் உணவு.

நிறையத் தண்ணீர்;கொஞ்சம் பழங்கள்.

பெருக்கெடுத்தோடும் உற்சாகம்,உடல் களைக்காத வலிமை,உள்ளத்தின் சுறுசுறுப்பு.

ஏழையில் வலியை கொஞ்சமாவது உ
ணர வைக்கும் உண்மை ரமழான்.

இப்படியொரு நோன்பு வைப்போமா???

சமீலா யூசுப் அலி
July 5, 2014
‪#‎Shameelayoosufali‬ ‪#‎ramadan‬ ‪#‎health‬ ‪#‎ifthar‬

Saturday, June 28, 2014

உறக்கம் கலைத்த நீள் இரவும் சில சிந்தனைகளும்









உறக்கம் வரமறுத்து உள்ளம் அடம் பிடித்தழுத அந்த நீண்ட இரவு மறக்கக் கூடியதன்று.

பேரினவாதத்தின் கொடிய கரங்களுக்கிடையில் மீண்டுமொரு முறை முஸ்லிகள் நசுங்கிய அந்தக் கணங்கள்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அடையாளச் சின்னம் நளீமிய்யா.
நளீமிய்யா முற்றுகையிடப்பட்டுள்ளது;ஆயுதம் தாங்கிய வன்முறைக் கும்பல் வெளியே நிற்கிறது;உள்ளே ஆண்களும் பெண்களும் சின்னஞ்சிறுவர்களுமாய் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.நெஞ்சு பதை பதைத்து உயிருக்குள்ளால் ஒழுகத் துவங்கியது.

களுத்தறை, தர்கா நகர்,பேருவளை தொடங்கி தீயின் நாக்குகள் நாடெங்கும் பரவ கறுப்பு ஜூலை பற்றிய ஞாபங்கள் மறக்காமல் வந்து போயின.

அண்மையில் தான் கறுப்பு ஜூலை பற்றிய கட்டுரை ஒன்றினை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்திருந்தேன்.அந்த அதிபயங்கரமான அனுபவங்களின் விளைவாகத் தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கினார்கள்;அந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது அது மிக நியாயமாகத் தான் தெரிந்தது.

எத்தனை நாளைக்குத் தான் அடிமை வாழ்வு வாழ்வது,குறைந்த பட்சம் தற்காப்புக்கான ஏற்பாடுகளாவது தேவை என்று மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

ஒரு போதும் ஆயுதப் போராட்டத்தை என்னால் முழுமையாக நியாயப் படுத்த முடியாது;எனினும் அழிக்கப்படுபவன் எழுந்து போராடுவதைப் பற்றியும் எனக்கு இருகருத்து கிடையாது;அவன் எந்த இனம் சார்ந்தவனாக இருந்தாலும் சரியே.

முள்ளிவாய்க்காலில் நம் சகோதர தமிழினம் துடைத்தெறியப் பட்ட போது மெளனம் காத்தோம்.எவருக்கோ வந்த விருந்து நமக்கெதுக்கு என்று வாளாவிருந்தோம்.

மெளனம் ஒரு கையாலாகாத நிலை
மட்டுமன்று;மெளனம் ஒரு துரோகம்;மெளனம் ஒரு காட்டிக் கொடுப்பு.

அடக்குமுறையின் போது மெளனிப்பதன் வேதனையை இன்று சர்வநிச்சயமாக உணர்கிறோம்.

ஊடகங்கள்,அரசு,அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பெரும்பான்மைத் தோழர்கள் என நீளும் இந்த மெளனத்தின் அடர்த்தி வேதனையையும் விசனத்தையும் அதிகரிக்கின்றது.

மிகப்பெரிய பயங்கரம் மோசமான மனிதர்களின் அடக்குமுறைகளோ குரூரங்களோ அல்ல;நல்ல மனிதர்கள் அந்த அடக்கு முறைகள் மீதும் குரூரங்கள் மீதும் காட்டும் மெளனம் தான்” சொன்னவர் மார்டின் லூதர் கிங்

தீமைகள் நடக்கட்டும் என வாளாவிருப்பதும் ஒரு வகையில் அந்த அநியாயங்களுக்குத் துணை போவது போன்றது தான்;ஏனெனில் மறைமுகமாக அந்த அடக்குமுறையை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்;அதே வேளை அந்த அநீதியானது ,அதற்கெதிராகப் பேசுமாறோ அல்லது அதற்கெதிராகச் செயற்படுமாறோ உங்களை ரோஷமுறச் செய்யவுமில்லை.

இஸ்லாம் அமைதியின் மார்க்கம்.அமைதியின் அர்த்தம் உன் உள்ளங்காலுக்குக் கீழே நிலம் நழுவிக் கொண்டிருக்கும் போதும் பேசாமலிருப்பது அல்ல.
அதே நேரம் அநியாயம் செய்யப்பட்டவருக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும்;அவர் ஒரு பெளத்தராக,இந்துவாக அல்லது கிரிஸ்தவராக இருக்கலாம்.

ஒரு மதத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ எதிராகவல்ல; அடக்குமுறைக்குகும் அட்டூழியத்திற்கும் எதிராக போராடுவதே அத்தியாவசியமானது;அது ஒரு முஸ்லிமின் பண்பும் கூட.

நம் கையால் நடக்கும் தவறுகளை நாமெல்லாம் முஸ்லிம்கள் என்று மறைக்கும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உள்ளங்கள் நமக்கு வேண்டாம்.
இனியாவது அநீதிகளுக்கெதிராய் குரல்களை உயர்த்துவோம்.

அது அரசாக இருந்தாலும் சரி,ஊடகங்களாக இருந்தாலும் சரி,நாம் சார் இயக்கங்களாக நிறுவனங்களாக இருந்தாலும் சரி பொது பல சேனா போன்ற கடும்போக்கு அமைப்புக்களாக இருந்தாலும் சரி.,குற்றம் குற்றமே.

அடுத்தாக பெளத்த மதம் சார்ந்த எல்லோரையும் குரோதம் கொப்புளிக்கும் கண்களுடன் பார்க்க வேண்டாம்;அன்றாடம் நாம் பழகும் பேசும் ஒன்றாக வேலை பார்க்கும் பல சிங்கள சகோதர சகோதரிகள் இந்த வன்முறைகளுக்கெல்லாம் அப்பாற் பட்டவர்கள்.

எல்லோர்க்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது; அதற்கு இறைச்சி காட்டித் தூண்டி விடும் கைங்கரியத்தை சில தீவிரவாத அமைப்புக்கள் செய்கின்றன.

உணர்வுகள் தூண்டிவிடப் படும் போதும்,தனிநபர்கள் சேர்ந்து கும்பலாகும் போதும் மூளை மரத்துப் போய் விடுகிறது;நடுநிலையாககச் சிந்திக்கும் திறன் செத்தழிந்து விடுகிறது.

பெளத்தம் அகிம்சையின் இல்லம்;இந்தத் தாக்குதல்களுக்கு முதலில் இலக்காகியிருப்பது பெளத்த மதத்தின் அமைதிக் கொள்கைகள் தான்.மதங்களை நிந்திப்பது ரசூல் ஸல் அவர்களின் முன்மாதிரிகளுக்கு நேரெதிரானது.

ஒரு முயலைச் சிங்கமாகவும் ,சிங்கத்தை முயலாகவும் சித்தரிக்கக் கூடிய வல்லமை ஊடகங்களுக்கு உண்டு.அரசு சார் ஊடகங்களெல்லாம் கை கட்டி வாய் பொத்தி மெளனிக்க இணைய வழியே உண்மையான தகவல்கள் வெளித்தெரிய வந்தன.இவற்றில் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் பங்களிப்பு மகத்தானது.

Citizen Journalism எனும் பிரஜா ஊடகவியலின் பிரதான களமாக சமூக ஊடகங்கள் திகழ்ந்தன.இணைய இணைப்புக் கொண்ட எவரும் தங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் பிரஜா ஊடகவியலாளர்களாகின்றனர்.

எனினும் சமயங்களில் வதந்திகள் காட்டுத் தீ போலப் பரவவும் இதே பிரஜா ஊடகவியலாளர்களின் அனுபவமின்மையும் பொறுப்பற்றதன்மைகளும் காரணமாய் அமைந்ததையும் மறுக்க முடியாது.செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வது பற்றி நாமனைவரும் இரண்டு தரம் யோசிக்க வேண்டும்.

அல்குர்ஆன் 29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?

அல் குர்ஆன் 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

நடந்த சம்பவங்களிலிருந்து பெறக் கூடிய படிப்பினைகளோடும் ஆழ்ந்த சாணக்கியத்தோடும் உணர்வுகளுக்கு மேலால் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனோநிலையோடும் முன் செல்வோம்.

சமீலா யூசுப் அலி

http://shameela2014.blogspot.com/
https://www.facebook.com/Shameela2013

Saturday, June 7, 2014

அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....

சம்பவம் 01

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மகன் ,பக்கத்தில் தாயும் தந்தையும் புளகாங்கிதத்துடனும் பூரிப்புடனும் நின்றிருக்கின்றனர்.பட்டம் பெற்ற மகனைப் பாராட்டி இரண்டு வார்த்தை பேச முடியாமல் உதடுகள் மெளனிக்கின்றன. மகனுக்கோ பெற்றோரைக்கட்டியணைக்க வேண்டும் போல் பொங்கிவரும் உணர்ச்சிகள் ஏனோ நீர் தெளித்த பாலாய் அடங்கிப்போகின்றன.

சம்பவம் 02

ஆஸ்பத்திரியில் பார்வையாளர் நேரம்.தன் சகோதரியின் கட்டிலருகே ஓடோடி வரும் சகோதரன். சிறிது நேரம் தாமதித்து, கொண்டு வந்த உணவுப்பாத்திரத்தை கையில் கொடுத்து சுகம் விசாரிக்கிறார். தலை தடவி விட வேண்டும் போல குறுகுறுத்த கையை மெல்ல இழுத்துக்கொண்டு விடுகின்றது ஏதோவொன்று.

சம்பவம் 03

மனைவிக்குப் பிரசவம், சுற்றிய பூப்பந்தாய் ஒரு குழந்தை அருகில்.குழந்தையைக் கொஞ்சும் கணவனுக்கு மனைவியின் கை தடவி தன் அன்பைப் பகிர மிகுந்த கஷ்டமாயிருக்கின்றது.
சம்பவம் 04

தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான ஓர் ஆங்கிலத்திரைப்படம். தாய் தந்தையுடன் அமர்ந்து பார்க்கும் ஒர் ஒன்பது வயதுச் சிறுமி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன். படத்தில் தாயைக் கட்டியணைத்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கோ வெட்கம் வந்து விடுகிறது,ஓரக்கண்ணால் தாயையும் தந்தையையும் நோக்குகிறாள்.சிறுவனுக்கோ பெரும் சந்தேகம் “ஏன் என் தாய்,தந்தையர் அவ்வாறு என்னிடம் சொல்வதோ,கட்டியணைப்பதோ இல்லை’


அன்பை வெளிப்படுத்துவதை ஒரு குற்றமாகப்பார்க்கும் நம் சமூகத்தின் நிலையின் ஒரு சில துளிகளே மேலே கண்டவை.
கண்ட கண்ட இடத்தில் கண்களே கூசுமளவுக்கு ஆபாசமாக அன்பை வெளிப்படுத்தும் மேலைத்தேய வழக்கம் ஒரு புறம்; மறுபுறம் அன்பை வெளிப்படுத்துவதை ஆபாசக்கண் கொண்டு நோக்கி பதுங்கிக் கொள்ளும் கீழைத்தேய சமூகம்.

உங்கள் சகோதரருடன் உங்களுக்கிருக்கும் அன்பை வார்த்தைகளாலும் பகிரங்கப்படுத்துங்கள் என்ற நபிவழி வந்த வாரிசுகள் நாம்.ஆனால் இன்று சமூகத்தின் வரட்டு வேதாந்தங்களுக்கு செவிசாய்த்ததன் விளைவாகவும், வழமைக்கு மாறாக எந்த புதுவித வித்தியாசத்தினையும் செய்யக்கூடாது அது நன்மையாக இருந்த பட்சத்திலும் கூட, என்ற அதீத பிடிவாதத்தின் காரணமாகவும் நாம் நடந்து வந்த சுவடுகளை மறந்து விட்டிருக்கிறோம்.

மனிதனின் புலன்களில் தொடுகை என்ற உணர்வு பிரதானமான ஒன்று. ஆயிரம் வார்த்தைகளால் தர முடியாத ஆறுதலை ஒரு அழுத்தமான தழுவலால் தர முடியும்.
சில நேரங்களில் வார்த்தைகள் கட்டாய மெளனத்துக்குள்ளாகின்றன; அப்போதெல்லாம் உடல்களுக்கிடையிலான தொடர்பாடல் தான் சாத்தியப்படுகிறது. இதனால் தான் சமூக விஞ்ஞானத்திலும் உளவியலிலும் உடல் மொழி எனப்படுகின்ற Body Language க்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

எமது கலாச்சாரத்தில் இந்த அன்பை மொழிமூலம் வெளிப்படுத்துவதும் தொடுகை மூலம் வெளிப்படுத்துவதும் வெட்கம் தரக்கூடிய விடயமாகவும் சமயங்களில் தரக்குறைவான அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், காதல் அல்லது அன்பைக்குறிக்கும் லவ் என்ற ஆங்கிலச்சொல் முடியுமான அனைத்து வகையிலும் வர்த்தகமயமாகிவிட்டது. ஆண் பெண் இடையில் துளிர்த்து வளரும் எதிர்பால் ஈர்ப்பையே இங்கு அந்தச் சொல் அர்த்தப்படுத்துகின்றது என்பதே அனேகரின் அகராதி. நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் அல்லது ஐ லவ் யூ என்ற வார்த்தைகளை உதடுகளால் நம் பெற்றோர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு உணர்ச்சிபூர்வமாக எம்மால் ஏன் உச்சரிக்க முடியாதுள்ளது?

அன்பை பரிமாறுவதை அதை வாய் விட்டு உரியவருக்குத் தெரிவிப்பதை உற்சாகப்படுத்தும் இஸ்லாத்தின் பெயரைக்கூறிக் கொண்டே அதை நாம் ஒரு வெறுக்கத்த விடயமாக மாற்றியிருக்கிறோம்.
இன்று விரிசலடையும் குடும்ப உறவுகளை மீள இணைக்கும் வல்லமை வாய்ந்த அன்பின் தொடர்ச்சியிலான அரவணைப்பு, ஆறுதலளிக்கும் தொடுகைகள் ஆரோக்கியமானவை.உடலுக்கும் உள்ளத்துக்கும் சந்தோசத்தையும் சாந்தியையும், நெருக்கத்தையும் இறுக்கமான பிணைப்புக்களையும் வலுப்படுத்தும் அன்பின் வெளிப்பாடுகள் அத்தியாவசியமானவை.

சில நிமிடங்கள் சிந்தியுங்கள், இன்று உங்கள் அன்பை வேண்டி நிற்கும் அரவணைப்பைத் தேடி நிற்கும் உள்ளங்கள் எவை;தயங்காது அன்பை வெளிப்படுத்துங்கள்.இந்தப் பயணத்தின் முதலடி உங்கள் பாதங்களே.

2012.March 15th
Shameela Yoosuf Ali

Saturday, May 31, 2014

காசு சம்பாதிக்கும் பெண் திமிர்கொண்டவள் – சில பகிர்வுகள்


Shameela Yoosuf Ali

பெண் உழைக்கலாமா கூடாதா என்று கருத்து வேறுபாடுகளைத் தாண்டி உலகம் வளர்ந்து மிக நீண்ட காலமாயிற்று.

ஒரு முஸ்லிம் பெண் காசுக்கு வேலை பார்த்தல் ஆகுமா என்ற ஐயம் இன்னும் சிலரது உள்ளத்தில் இல்லாமல் இல்லை.

பணிபுரிதல் என்பது அத்தியாவசியமான போது மட்டுமே என்று பரவலாகச் சொல்கிறார்கள்.அத்தியாவசியமா அநாவசியமா என்பதை அந்தப் பெண்ணும் அவள் சார்ந்த குடும்பமும் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

ஒரு துறையில் தேர்ச்சி பெற்ற பெண், அந்தத் துறைக்கான பங்களிப்பை வழங்கியாக வேண்டியது அவசியம்;அதற்கான ஏற்பாடுகளை அவளது குடும்பமும் சமூக அமைப்பும் செய்து ஆக வேண்டும்.

குடும்பத்தை ஒழுங்காகப் பராமரித்து முடித்த பின்னர் தான் தொழிலுக்குச் செல்லாம் என்று பலர் கூறலாம்.குடும்பத்தைப் பரமாரிப்பது என்பது இடையறாத ஒரு வேலை.அதில் மனைவிக்கு மட்டுமல்ல கணவனுக்கும் பங்கிருக்கிறது என்பது புரிதலுக்குரியது.

குடும்பத்தையும் தொழிலையும் ஒரே நேரத்தில் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. ஒரு குடும்பம் என்றால் ஆயிரமிருக்கும்.அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருவரது வேலையை இன்னொருத்தர் செய்ய உதவலாம். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது.

இப்போதெல்லாம் ஒரு தேநீர் ஊற்றக் கூட தெரியாது என்று கணவர் ஒதுங்குவதும்,ஒத்தாசை செய்வதை அவமானமாகக் கருதுவதும் ஒரு பெருமையாகி விட்டிருக்கிறது.

எல்லாப் பெண்களும் வேலை செய்ய வெளிச்செல்லத் தான் வேண்டும் என்பதில்லை.வீட்டிலிருந்து கூட பணிபுரியலாம். தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள விரும்பும் மகளிரும் தனக்கென்றோரு பொருளாதார சுதந்திரத்தை ஆசிப்பவர்களும் தொழில் செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது.

தொழில் செய்யும் போது வரையறைகள் இருக்கின்றதே என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது; ஹலாலான தொழில்,நேர்மை,நம்பிக்கை மற்றும் நாணயமாக நடந்து கொள்தல் போன்றவை தொழில் செய்யக்கூடிய அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய வரையறைகள் தான்;அதில் இரு கருத்துக்கு இடமில்லை.மற்றப் படி இஸ்லாம் கூறுகின்ற அழகிய வாழ்வியலை நடைமுறைப்படுத்துவது பணிபுரிவதற்காக வெளிக் கிளம்பும் போது மட்டுமல்ல ,வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் கடைப்பிடிக்க வேண்டியதாகும்.

இஸ்லாமிய வரலாற்றின் தாய் அன்னை கதீஜா(ரலி) அவர்கள் மிகப்பெரும் வர்த்தகத்தை கொண்டு நடாத்திய ஒரு வெற்றிகரமான வியாபாரத் தலைவி(Business Woman).நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு உறுதுணையாய் இன்னுமொரு தோளாய் இருக்க அந்தத் தொழில் அவருக்கு தடையாக இருக்கவில்லை;மாற்றமாக தன் செல்வம் கொண்டு துணைவரை திடப்படுத்துபவராகவே அவர்கள் இருந்தார்கள்.

காசு சம்பாதிக்கும் பெண் திமிர்கொண்டவள் என்று கருத்து சமூகத்தில் இருக்கிறது.நான்கு காசு சம்பாதித்தால் தலை கால் புரியாது;கணவனை மதிக்க மாட்டாள் என்ற அநாவசியமான பயங்களும் இல்லாமலில்லை.காசு சம்பாதிக்காமலே ஆணவம் கொள்ளும் பெண்களும் மதிக்காத மகளிரும் தாரளமாய் இருக்கிறார்கள்.இவை தனிமனித இயல்பு சார்ந்த பண்புகள் மாத்திரமே.

வீட்டிலிருந்தோ வெளியில் சென்றோ தனது கையால் உழைப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது;இறைவனுக்காக நேர்மையாக உழைக்கும் போது காசுக்கு மேலால் ஒரு ஆத்ம திருப்தி ஆட்கொள்கிறது. தன் காலில் நிற்கும் போது தன்னம்பிக்கை வளர்கிறது.

தன் பெற்றோருக்கு ஏதாவது தன் காசால் வாங்கிக் கொடுக்கும் சந்தோஷம் வேறு;கணவன் காசிலிருந்து வழங்குவது வேறு.
நினைக்குப் போதெல்லாம் தருமம் செய்யவும் சமயங்களில் கணவனுக்கும் வீட்டுக்கும் செலவளிக்கவும் ,நண்பிகள் உறவினர்களுக்கு சின்னப் பரிசுகள் வழங்கவும்,தனக்குத் தேவையான சில பொருட்களை சுயமாகவே வாங்கிக் கொள்ளவும், தன் திறமைகள் உபயோகப்படுவதற்கான வாய்ப்புக் கிடைப்பதும் உழைக்கும் பெண்ணின் சிறு மகிழ்ச்சிகள்.

பல ஆண்களைக் கூட ஒரு பெண் நிர்வகிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் அவர்கள். அன்றைய காலகட்டத்தில் மதினா ஒரு மாபெரும் வணிக மையமாகத் திகழ்ந்தது. உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் மதீனத்துச் சந்தைக்கு ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் அவர்களை தலைவராக நியமித்தார்கள். ஷிஃபா (ரலி) அவர்கள் அதிக அறிவுக் கூர்மையுடையவர் மற்றும் தூர சிந்தனையுடையவர். அவரது ஆலோசனைகள் உமர்(ரலி) அவர்களுக்குப் பலசமயங்களில் உதவிகரமாக அமையப்பெற்று அதிக லாபத்தையும் ஈட்டித்தந்தன.

பெண்களின் பங்களிப்பின்றி மீண்டுமோர் மதீனா பற்றிக் கனவு கூடக் காண முடியாது.சிந்தனைகளை அகலப்படுத்துவோம்.


By Shameela Yoosuf AliEngal Thesam 2014

Thursday, May 22, 2014

பல்லின சமூகமும் முஸ்லிம் பெண்களும் – சில ஆலோசனைகள்.





Shameela Yoosuf Ali

1. இஸ்லாத்தைநான் தான் சரியாகப்பின்பற்றுகிறேன்;எனக்குத்தான் தெளிவாக இஸ்லாம் தெரியும் என்ற அகம்பாவத்தைமுதலில் தூக்கியெறியுங்கள்.சில சிந்தனைகள் எமக்கு முரண்பட்ட கருத்துக்களாகத் தோன்றும்போதிலும் சரியானவையாக இருக்கலாம் என்பதனை கவனத்திற் கொள்ளுங்கள்.

2. ஹிஜாப்ஆடையை ஏன் அணிகிறோம் என்பதில் தெளிவு அவசியம்.ஹிஜாப் என்பது எமது சூழல், கால நிலை,அமைவிடம்,தொழில், தனித்துவம் சொந்த விருப்பு வெறுப்பிற்கிணங்க மாறுபடலாம்;ஹிஜாபின்நோக்கத்தினை நிறைவேற்றும் எந்த உடையையும் நீங்கள் அணியலாம். யாருக்கேனும் பயந்து உங்களுடையஉடையின் நிறந்தையோ அல்லது அமைப்பையோ மாற்றுவது அல்லது மாற்றாமலிருப்பது அவசியமற்றது.

3. நீங்கள்தனித்துச் சென்றாலும் கூட்டாகச் சென்றாலும் உங்களுடைய பாதுகாப்பையும் கண்ணியத்தையும்உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.குறிப்பாக நீங்கள் ஹிஜாப் அணிந்திருப்பதால் உங்களுக்குபாலியல் ரீதியான தொந்தரவுகள் நிகழாது என்பதற்கான உத்தரவாதம் கிடையாது, முன் யோசனையோடுநடந்து கொள்ளுங்கள்

4. வீண்சந்தேகங்களையும்வெறுப்பையும் சம்பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.

5. அந்நியமதங்களின் புனிதஸ்தலங்களையும் மதத்தலைவர்களையும் எங்கேயும் எப்போதும் கண்ணியப்படுத்தமறக்க வேண்டாம். இது நபியவர்களின் வழி என்பது நினைவிருக்கட்டும்.

6. அடுத்தவர்களுக்குஉதவி உபகாரம் செய்வதில் முந்திக் கொள்ளுங்கள். கீழே விழுந்த பொருளொன்றை எடுத்துக் கொடுப்பதுபோன்ற சிறிய உதவியாக இருந்த போதிலும் சரியே. உபகாரம் செய்யும் போது இனத்தையோ மதத்தையோமனதில் கொள்ள வேண்டாம்; முஸ்லிம் என்பதற்காக முன்னுரிமை கொடுக்கவும் வேண்டாம்; அதிகதேவையுடையவருக்கே முதல் கவனம் கொடுப்பது வரவேற்பிற்குரியது.

7. தஃவாஎன்ற பெயரில், அந்நியச் சகோதர சகோதரிகளை அடிக்கடி தொந்தரவு பண்ணுவதையும் உபதேசம் பண்ணிஎரிச்சலூட்டுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

8. குற்றங்கள்நடக்கும் போது, முஸ்லிங்களிடையே நடக்கும் போது அதற்கொரு விளக்கமும் இன்னொரு இனக்குழுவிடையேநடக்கும் போது இன்னொரு புரிதலும் கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில்இறைவன் நீதியாளன்.

9. எப்போதும்நீதிக்காகக் குரல் கொடுங்கள்; எமது சமூகத்துக்கெதிரான இன்னொரு தனிமனிதனுடைய உரிமையாகஇருந்தாலும் நியாயத்திற்கே முதலிடம் வழங்குங்கள்.

10. விமரிசனங்களைக் கண்டு பொங்கியெழாதீர்கள்.அவைஎம்மை செதுக்குவன; அவற்றை அறிவுபூர்வமாக அணுகுங்கள்.பிழை எம்மிடம் எனில் தயக்கமின்றிஏற்றுக்கொள்ளும் விசாலமான உள்ளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

11. பிறமதத்தவ்ர்களிடம் நேசம் காட்டும் போதுஅது உண்மையானதாக இருக்கட்டும்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இயல்பு, இஸ்லாத்திற்குமுரணானது.அன்பிற்கு வேறு நோக்கம் வேண்டியதில்லை ; சில இலாபங்களை அல்லது மறைவான நிகழ்ச்சிநிரலைவைத்துக் கொண்டு கருணை காட்டுவதை விட அன்பு காட்டாமலிருப்பது மேலானதாகும்.

12. இயல்பாக இருங்கள்; செயற்கையாக இராமல் உங்கள்தனித்துவத்தோடு இருங்கள்.உங்கள் உடை குறித்தோ அல்லது உங்களது அடையாளம் குறித்தோ வெட்கப்படாதீர்கள்;பெருமைப்படுங்கள்.

13. ‘இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்’ கிழக்கோமேற்கோ இஸ்லாமே சிறந்தது’ ‘முஸ்லிமாய் இருப்பதை இட்டுப் பெருமைப்படுகிறேன்’ போன்ற வாசகங்கள்உங்கள் மனதில் இருக்கட்டும்,தயவு செய்து சமூக ஊடகத்தளங்களில் இவற்றை பதிவு செய்து மற்றவர்களின்உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்; அது இஸ்லாத்தின் நடைமுறையும் அல்ல.

14. நிறைவாகச் செவிமடுங்கள்; குறைவாகப் பேசுங்கள்; உங்களைசுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.இன்று செய்திகளை நீங்கள்அடையும் காலம் போய் செய்திகள் உங்களை வந்தடையும் காலம். தெரிந்து கொள்ளுங்கள்.

15. நான் என் குடும்பம் என்ற வட்டம் தாண்டி,சமூக விவகாரங்களில் ஆர்வம் காட்டுங்கள்.உங்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வகையிலானபங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்க மறக்க வேண்டாம்.

சமீலா யூசுப் அலி

by Shameela Yoosuf Ali
26 April 2013
எங்கள் தேசம் 2013

Tuesday, May 20, 2014

இரவுகள் விரும்பப்படுகின்றன.

Shameela Yoosuf Ali on Face book


ஒரு களைப்பூட்டும் நாளின் கரையோரம் இரவு.

நாள் முழுதும் சக்கரமோடிய ஒரு பெண்இரவின் மடியிலாவது கண்ணயர முயற்சிக்கிறாள்.

அவமானங்கள் கூர்முள்ளாய் உறுத்திய கணங்கள் இரவுக்குள் பூட்டப்படுகின்றன.

எங்கோ ஓர் மூலையில் ஒரு ஆண் ரகசியமாய் அழுது கொள்கிறான்.

குழந்தைகள் கனவில் சுவர்க்கத்தைக் கண்டு சிரிக்கிறார்கள்.

ஒரு எழுத்து இராட்சசி அப்போது தான் எழுந்து கொள்கிறாள்.

கன்னிப்பெண் வருங்காலக் கணவனைக் கற்பனை செய்கிறாள்.

முதிர்கன்னியோ கன்னத்தின் கடைசி கண்ணீர் கோட்டை இரவின் சுவரில் வரைகிறாள்.

மனித மனதின் ஏமாற்றங்கள் ஒரு தூக்கத்துக்குள் அடங்கிவிடுகின்றன.

இரவு வரும் போது பெருமூச்சுகள் வருகின்றன.

ஏதோ ஒரு நிம்மதியில் இறுக மூடுகின்றன விழிகள்.

2014.May 19
9.47 pm
By Shameela Yoosuf Ali

My book in print -Ethnic Conflict has a Military Solution.




If we think that we can suppress the voice of Tamil speaking community by defeating

LTTE militarily, we are wrong.

Shameela Yoosuf Ali


Alhamdulillah.


Having your work in print on a Sunday Morning would make you jump out with excitement.
You can order @ http://www.amazon.ca/Ethnic-Conflict-Has-Military-Solution/dp/1497588111
................................................................................
If we think that we can suppress the
voice of Tamil speaking community by defeating
LTTE militarily, we are wrong.
It will be an opening to another war.
We should
go for a localized solution with the equal
participation of Sinhalese, Tamils and Muslims
forgetting all other differences.

Tuesday, May 13, 2014

A little girl with a Posy


Shameela Yoosuf Ali



Mountain ranges covered with layers of aromatic tea bushes, Skies painted with an amazing mixture of white and azure blue, the atmosphere disguised in misty veils, you are drawn into an eternal tranquility muted from all the hullabaloo of everyday life.

Illustrative beauty of Nuwereliya can not be expressed in mere words,it is but little piece of heaven indeed.

As you drive through the picturesque hairpin bends, wild blossoms , pine trees and lavish English style cottage houses greet you sideways.

Freezing breezy wind fondles with your hair noiselessly as you pass the lacy flaps of water, falling down amid the slumbering rocks.
Suddenly a small girl with a posy of flowers appears from nowhere like a dream.

The small girls and boys carrying flower posies trying to stop the vehicles are a common sight in this belt.

As this naive girl posed to my camera, with all smiles and a posy in her hands, some where down my heart I was feeling guilty. With her tender looks and innocence she seemed like any 8 year old child. But her hands were quite rough revealing the untold story of hardships, hitches and struggles.

I just pray that this smile should always remain, chaste and beautiful throughout her life.

Of course, mean time we can talk about Social change, Child Rights and Child Labour on our leisure in deluxe conference halls over a coffee.

by Shameela Yoosuf Ali
2014 May 13th

Saturday, May 10, 2014

Snowy mountain range





Snowy mountain range painting by Shameela Yoosuf Ali


அன்பும் காலமும்








Shameela Yoosuf Ali




முன்னொரு காலத்தில் ஒர் அழகிய தீவொன்றிருந்தது.அங்கு துக்கம்,சந்தோஷம்,அறிவு,அன்பு மற்றும் மற்ற உணர்வுகளும் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் ஒரு திடீர் அறிவித்தல். அந்தத்தீவு மூழ்கப்போகிறது என்ற அதிர்ச்சித் தகவல். எல்லா உணர்வுகளும் தங்களுக்கென்று தனியான கட்டுமரம் அல்லது தோணிகளை நிர்மாணித்து அங்கிருந்து வெளியேறத் துவங்கின.

ஆனால் அன்பு வெளியேற மறுத்து விட்டது.கடைசித் தருணம் வரை அங்கிருக்க வேண்டும் என்பதே அதன் ஆசை. எல்லா உணர்வுகளும் வெளியேறி விட அன்பு மட்டுமே எஞ்சியிருந்தது.

தீவு மூழ்கத் தொடங்கியது.கடைசியாக அன்பு தன் மற்றைய நண்பர்களிடம் உதவி கேட்போம் எனத் தீர்மானித்தது.

‘செல்வச்செழிப்பு’ மிகப்பாரியதோர் சொகுசுக் கப்பலில் அன்பைக்கடந்து சென்றது
“செல்வச்செழிப்பே, என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயா? அன்பு கேட்டது.
‘முடியாது,எனது கப்பல் ஏராளமான தங்கம் வெள்ளியினால் நிரம்பியுள்ளது,அதனால் அங்கு உனக்கு இடமில்லை’

‘அன்பு’ என்ன செய்வதென்று யோசிக்கும் போது ‘பெருமை’ மிகுந்த அழகானதோர் தோணியொன்றில் வந்தது.
‘பெருமையே,தயவு செய்து எனக்கு உதவி செய்’ அன்பு கெஞ்சியது.
‘அன்பே, எனக்கு உதவி செய்ய முடியாது, நீ நனைந்திருக்கிறாய், நீ என் தோணியை நாசமாக்கி விடுவாய்’ பெருமை பதிலளித்தது.

‘துக்கம்’ அருகில் வந்தது. அன்பு கேட்டது ‘ துக்கமே, நான் உன்னுடன் வருகிறேன்’
‘ஓ அன்பே, நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன், நான் தனியாக இருந்தாக வேண்டும், உன்னை அழைத்துச் செல்ல முடியாது.”
துக்கமும் மறுத்து விட்டது.

‘சந்தோஷம்’ அன்பைக் கடந்து சென்றது. ஆனால் அது தாங்க முடியாத உற்சாகத்துள்ளலில் இருந்ததால் அன்பு கூப்பிடும் குரலைக் கேட்கவேயில்லை.

திடீரென ஒரு குரல்.

‘அன்பே, இங்கு வா, நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்’ அது வயதில் முதிர்ந்தது. கரைபுரண்டோடிய மகிழ்ச்சியும் குதூகலத்திலும் அன்பு எங்கே போகிறோம் என்பதைக் கூட கேட்க மறந்து விட்டது.கரை தட்டி விட்டது, அன்பை விட்டு விட்டு அந்த முதிர்ந்த உருவம் சென்று விட்டது.

அன்பு மிகவும் முதிர்ந்திருந்த அறிவிடம் கேட்டது ;எனக்கு உதவி செய்தது யார்?’

அது தான் ‘காலம்’ அறிவு பதிலளித்தது.

‘காலமா? ‘ அன்பு ஆச்சரியப்பட்டது.

ஆழ்ந்த சிந்தனையுடன் ‘அறிவு’ சொன்னது ‘ காலம் ஒன்று மட்டுமே அன்பின் விலைமதிப்பில்லாப் பெறுமதியை உணர்ந்திருக்கிறது’

ஆங்கிலத்தில் யாரோ
தமிழில் சமீலா யூசுப் அலி
2013.June 11th

Tuesday, May 6, 2014

இல்லாமல் போன ஏதோ ஒன்று.


Shameela Yoosuf Ali


இரவினில் வைத்து,அரைவாசி முகத்திலும் அப்பியிருக்க விழிக்கும் , நுணி விரல்களில் ரத்தமாய் சிவக்கும் அரைத்த மருதாணியின் மகிழ்ச்சி,கடையில் வாங்கி உள்ளங்கையில் வைத்த உடனே சிவக்கும் உடனடி மருதாணியில் வராமல் போகிறது.

பிள்ளைப் பருவத்தில் சீத்தைத் துணியில் உம்மா தைக்கும் சட்டை அணியும் போது கிளர்ந்தெழும் பெருநாள் குதூகலம், பல ஆயிரங்கள் கொண்டு பட்டாய் நெகிழும் விலையுயர் ஆடையை நேர்த்தியாய் அணிகையில் கிடைப்பதில்லை.

அரைகுறை வெளிச்சத்தில் ரொட்டியைத் துண்டு துண்டாய்ப் பிய்த்து ,சுடு இறைச்சியும் ஆணமுமாய் மணக்கத் தின்றதன் ஆனந்தம் குளிரூட்டிய உணவகத்தில் பக்குவமாய் படைக்கும் வகை வகை உணவுகள் முள்கரண்டியால் உட்கொள்கையில் இல்லாமலாகி விடுகிறது.

காற்றுப்படபடக்க மழைத்துளிகள் வர்ஷிக்க இனிக்கப் பறக்கும் இருசக்கர மோட்டார்ப் பயணம் போல் வாய்ப்பதில்லை ஆடம்பர வாகனத்தில் காற்றுப்புகா உள்ளுக்குள் சொகுசு இருக்கைப் பயணம்.

நிலாக்கால முன்னிரவில் ஆற்றுக் கல்லில் கதகதப்பில் நண்பியும் நானுமாய் வானம் பார்த்து படுத்துக் கிடந்த நட்சத்திரங்கள், கட்டிடடங்கள் புடை சூழ மொட்டை மாடியில் உட்கார்ந்து நிலாப் பார்க்கும் போது காணவில்லை.

மொத்தத்தில் அதிகம் இல்லாமல் இருந்த போது இருந்த ஏதோவொன்று ,அதிகம் இருக்கிற போது இல்லாமல் போகிறது என்பதைத் தெளிவாக உணர்கிறேன்.

By Shameela Yoosuf Ali
2014 May 6th

Monday, April 28, 2014

symbol of serenity



I am longing to visit this place again and again.

This is the symbol of serenity where all the discrimination against race,ethnicity,gender,colour and Language are forgotten.
When you stand here, you can only feel your heart echoing for the Most Merciful-Our Creator.

Who else want to sit here and cry your heart out?

Shameela Yoosuf Ali
 

Dawn break on a full moon day

Dawn break on a full moon day ,Painting by Shameela Yoosuf Ali

வாங்கிக் கட்டியதுண்டா?



Shameela Yoosuf Ali 

யாருக்கேனும் வலிந்து உதவி செய்யப் போய் வலிக்க வலிக்க வாங்கிக் கட்டிய அனுபவம் உண்டா?

உங்கள் நல்லெண்ணம் தப்பாகப் புரியப்பட்டு உறவையே முறித்துக் கொண்ட கதைகள் உண்டா?

ஒருவரது நல்வாழ்விற்காக மட்டுமே பிரார்த்தித்த உங்கள் உள்ளம் அவருக்கெதிராகச் செயற்பட்டதாய் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட தருணங்கள் உண்டா?

வலிக்கும்;நிச்சயம் வலிக்கும்.
பிறர் நலம் நோக்கிய வாழ்தல் வலிக்கும்.

உங்கள் இலட்சியம் நோக்கிய கடும் பாலைப் பயணத்தில் ,சுடும் பாதங்களுக்கு இந்த வலிகள் தான் சுடாத பாதணிகளாகும். மறந்து விடுங்கள்;மன்னித்து விடுங்கள்.

உங்கள் உள்ளத்தில் சுமக்க ஆயிரம் அற்புதங்கள் காத்திருக்கும் போது கால் தைக்கும் சிறுமுள்ளைப் பற்றிய கவலைக்கு இடமேது.

By Shameela Yoosuf Ali
April 28th 2014

Sunday, April 27, 2014

அழகு படுத்தும் பாடு


Shameela Yoosuf Ali

இயல்பிலேயே அழகு,அலங்காரம் என்பவை பெண்களுக்குப் பிடித்தமான விடயங்கள்.

தன்னை அழகுபடுத்திக் கொள்வது அற்புதமானதோர் விடயம்;அழகாக இருப்பதும் நேர்த்தியான உடைகளும் நிச்சயம் தன்னம்பிக்கையை வளர்ப்பன.

நம்மில் அனேகர் விரும்பியோ வெறுத்தோ அழகை வெள்ளை நிறத்தோடு சம்பந்தப் படுத்தியே பார்க்கப் பழக்கப் பட்டிருக்கிறோம்.தோலை உரித்தாவது அந்த நிறம் பெறுவதற்காக ஆயிரம் அழகுசாதனப் பொருட்களை பரீட்சிக்கிறோம்.சிவப்பழகுக் கிரிம்கள் அதிகம் விற்பனையாவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஆகும்.

அதிக தண்ணீர்,உடற்பயிற்சி,பழங்கள்,பச்சைக் காய்கறிகள்,தேவையான தூக்கம்,பொறாமை போன்ற மாசுகளற்ற நல்ல உள்ளம் இவை உடலுக்கு அதிக வனப்பையும் ஆரோக்கியத்தையும் தருவதில் முதன்மையான விடயங்கள்.

சமீப காலமாக குறிப்பாக எமது முஸ்லிம் சமூகப் பெண்களிடையே வட இந்திய சினிமா அல்லது சின்னத்திரை நாடகங்களின் பாதிப்பின் வெளிப்பாடுகளை அவதானிக்கலாம்.உடையிலும் முகத்தில் அப்பியிருக்கும் மேக் அப் பூச்சுக்களிலும் பல பெண்களின் சுயம் தொலைந்து விட்டிருக்கிறது.யாரோ ஒருவரைப் போன்று ஆக வேண்டும் என்ற ஆசையில் மிதமிஞ்சிய கண்மூடித்தனமான அலங்காரங்களில்,எளிமையான அழகும் இனிமையும் தொலைந்து விட்டிருக்கின்றன.

இதே போன்று எமது சமூகப் பெண்களின் அபாயா மற்றும் ஹிஜாப் உடைகளின் தேர்வும் அணியும் முறையும் முழுக்க முழுக்க மத்திய கிழக்கின் தழுவலாக மாறி விட்டிருக்கிறது.உயர்த்தி விட்ட கொண்டைகளும் வீதியில் இழுபடும் உடைகளுமாய் இந்த பெஷன் வளர்கிறது.

தனது சுயம்,செய்யும் தொழில்,பணி மற்றும் தேவைகளின் நிமித்தமான ஹிஜாப் உடைக்குப் பதிலாக ஏதோவொரு கலாச்சாரத்தின் தழுவலாக உடைகள் அணிவது வழக்கமாகி விட்டிருக்கிறது.

1.அழகு வேறு ஆரவாரமான அலங்காரம் வேறு.அழகை மெருகூட்டிக் கொள்வதில் பிழையில்லை;பொருத்தமற்று வலிந்து மேற்கொள்ளும் ஒப்பனைகள் செயற்கையானவை.

2.அழகுக்கும் வெள்ளைநிறத்திற்கும் நேரடி சம்பந்தம் கிடையாது.எமது உள்ளங்களில் காலங்காலமாய் வேரோடிப்போன ஒரு அசட்டு நம்பிக்கை அது.எந்த நிறமாயிருந்தாலும் சரி, மாசுக்களற்ற சருமமே அழகாய் இருக்கும்.

3.உடை தேர்வதில் தனித்துவம் தேவை.ஒவ்வொரு சூழல்,இடம்,தொழில், தேவைகளை முன்னிட்டே அந்தத் தெரிவு இடம் பெறல் வேண்டும்.

4.அழகாய் இருப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் நல்ல உள்ளமும் அத்தியாவசியமானவை.

5.ஆபரணங்களாலும் வேறு அலங்காரங்களாலும் சோடிக்கப்பட்ட பெண்களை விட அறிவாலும்,உறுதியான தன்னம்பிக்கையாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்களே காலத்தின் இப்போதைய தேவை.

சிந்திப்போமா???

By Shameela Yoosuf Ali
2014 April 12

Saturday, April 26, 2014

To win the race of Life

To win the race of Life,you only need FAITH in GOD and self CONFIDENCE .Stop complaining that you do not have the potential,Money,Opportunity,Motivation or means to SUCCEED.Have a burning Desire,Passion and Enthusiasm.FOLLOW YOUR HEART and Hit the TARGET.Wish you all a splendid SUNDAY.

Shameela Yoosuf Ali 
2014 April 27th

North pole





North pole Painting by Shameela Yoosuf Ali


Friday, April 25, 2014

கலாநிதி தாரிக் ரமழானும் ஈமானும்




தாரிக் ரமழான் அவர்களின் சிந்தனைகள் நவீன உலக அரங்கில் அதிகம், பேசப்பட்டு வருகின்றன.இஸ்லாத்தின் தூதினை அழகிய வடிவில் பல்வேறு ஊடகங்களிலும் முன்வைத்து வரும் ரமழான் அவர்கள் முஸ்லிம் சமூகம் தன்னை ஏனைய சமூகங்களிலிருந்து தனிப்படுத்திக் கொள்ளாது,தனித்துவத்தோடு சமூக முன்னேற்றத்தின் பங்காளர்களாக மாற வேண்டும் என்பதில் அதீத கரிசனை காட்டி வருகிறார்.

யாரிந்த தாரிக் ரமழான்?
இக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஸ்தாபகரான ஹஸனுல் பன்னா(ரஹ்) மகள் வயிற்றுப்பேரர் தான் இந்த தாரிக் ரமழான் அவர்கள்.அவரின் தந்தை ஸஈத் ரமழான் அவர்கள் எகிப்தின் இஸ்லாமிய எழுச்சி வரலாற்றில் எழுதப்படும் பெயரும் பேறும் பெற்ற அறிஞர்.
தாரிக் ரமழான் அவர்களின் மொழிநடை கவித்துவமும் இனிமையும் பொருந்திய அலாதியான தனிநடை.பெண்களைப்பற்றிய அவரது கருத்துக்கள் கலாசாரத்தாக்கங்களினால் இழந்து போன பெண்ணின் தனித்துவத்தை பெண் சார்ந்த தூய இஸ்லாமிய சிந்தனையை மீட்டெடுக்கின்றது.

அண்மையில் அவரின் புகழ் பூத்த ‘ரடிகல் ரிபோர்ம்’ என்ற நூலை வாசித்துச் செல்லும் போது ‘இஸ்லாத்தில் பெண்கள்’ என்ற அத்தியாயத்தை அப்படியே உள்ளம் எழுதிக்கொண்டது.அல்ஹம்துலில்லாஹ்,ஒவ்வொரு ஆணும் பெண்ணின் தனித்துவத்தைப் புரிந்து கொள்ளவும் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப்பெறுமதியாக உணர்ந்து கொள்ளவும் அந்த அத்தியாயத்தை வாசித்தாக வேண்டும் என எண்ணுகிறேன்.

To Be A Europian Muslim என்ற அவரது மற்றொரு நூலின் நன்றியுரையின் பகுதியொன்றை ஆங்கில மூலத்தில் பேஸ் புக் இல் காணக் கிடைத்தது.அதற்கு கீழே ஒரு சகோதரி பதிந்திருந்த கருத்தும் என்னைக்கவர்ந்தது.

“எனது மனைவி ஈமான் எனக்கு வெறும் துணையாக மட்டும் இருக்கவில்லை.வாழ்க்கையின் பாதையில் சமயங்களில் எனது கருத்துக்களுக்கு சவால் விடுகிறாள்,விவாதிக்கிறாள்,கேள்விக்குள்ளாக்கிறாள்,விமர்சிக்கின்றாள்.
நீள் நெடுங்காலமாக எனது சிந்தனைகளின் முக்கியமானதொரு பகுதிக்கு மூலமாகவும் வழிப்படுத்தலாகவும் அவள் கண்ணாடியின் விம்பங்கள் அமைந்திருக்கின்றன.

இறைவனின் அன்பின் ஒரு பரிமாணத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியாமலிருக்கிறது,அவன் எனக்கு வழங்கியுள்ள விலைமதிக்க முடியாத பரிசுகளான என் துணைவி,அவளது இதயம்,அவளது அறிவு மற்றும் எமது பிள்ளைகளை நினைக்கும் போது.
அவளது வருகைக்கு நன்றிகள்;அவளது பொறுமைக்கும் நன்றிகள்”

கீழே பதிந்திருந்த ஒரு சகோதரியின் கருத்து சிந்தனைக்குரியது

திருமதி ஈமான் ரொம்ப அதிஷ்டசாலி,
“வாழ்க்கையின் பாதையில் சமயங்களில் எனது கருத்துக்களுக்கு சவால் விடுகிறாள்,விவாதிக்கிறாள்,கேள்விக்குள்ளாக்கிறாள்,விமர்சிக்கின்றாள்.”
எங்களுடைய சமூகத்தில் இப்படியானவை ஒரு பெண்ணைப் பொறுத்தளவில் அவள் திருமணமாகமலிருப்பதற்கான தகைமைகளாகும்.,குறிப்பாக தங்களை மார்க்கத்தில் பேணுதலாக இருப்பதாக நினைப்பவர்கள் இப்படியான பெண்களை விரும்புவதில்லை.

உம்மு ஹனா

ஆம்,நம் சிந்தனைக்கதவுகளைத் திறந்து விடுவோமா? ஒரே புழுக்கமாக இருக்கிறது.

Shameela Yoosuf Ali
2011.10.27

இன்றைக்கு மட்டுமாவது...


Shameela Yoosuf Ali

யாருக்கும் காத்திராமல் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் நகராமல் நின்றிருக்கின்ற ஒரு பகுதியினர் இருக்கிறார்கள்.

காலக் குதிரையின் சடுதியான ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓரமாய் ஒதுக்கியிருக்கும் எங்களைச் சுற்றியிருக்கும் வயது முதிர்ந்த பெற்றோர்கள் அல்லது தலை நரைத்த பாட்டனார்கள், உம்மும்மாக்கள் தான் அவர்கள்.

அவர்கள் வேண்டுவதெல்லாம் வேளைக்கொரு ஆடையும்,வாய்க்கு ருசியாக வகைவகையான சாப்பாடுகளும் கைநிறையக் காசும் அல்ல.உங்களுடைய நிர்மலமான அன்பைத் தான்.

அந்த வயதான குரல்களுக்கு செவிகளைக் கொடுங்கள்;சதா அலைபேசியிலும் இணையவலைப்பின்னலிலும் மூழ்கியிருக்கும் உங்களுக்குள் தொலைந்திருக்கும் சுதந்திரமான குழந்தையின் மனசை மீளப்பெறலாம்.

அவர்களோடு மனம் விட்டுப் பேசுங்கள்.ஏச்சு வாங்குங்கள்;செல்லமாய் குட்டினாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.ஓடையில் மிதக்கும் காலத்தோணியில் பின்னோக்கிச் செல்லும் அந்தக் காலக் கதைகளில் கரைந்து போகும் அதிஷ்டம் எத்தணை பேருக்கு வாய்க்கும்.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்பு காட்டுவதற்கு எந்த எதிர்பார்ப்பும் தேவையில்லை.அந்த வயதான கரங்களை எடுத்து உங்கள் கரங்களுக்கும் பொத்திக் கொள்ளுங்கள்.அந்த சுருங்கிய உள்ளங்கைக்குள் ஓடும் ஆயிரம் ரேகைகளில் ஆயிரம் கதைகளுக்கு இறக்கை முளைக்கும்.

அவர்கள் உட்கார்ந்திருக்கும் போது எழுந்து நில்லுங்கள்.              
"நீங்கள் முக்கியம் எங்களுக்கு,உங்கள் அனுபவம் தேவை எங்கள் வாழ்க்கைக்கு' என்ற வாய்விட்டுச் சொல்லுங்கள்.

வாரம் ஒரு முறையாவது ஒரு வயசான மனசுக்கு ஒத்தடம் கொடுங்கள்;உங்கள் காயங்களுக்கும் அந்தச் சந்திப்பு ஆறுதலாகும்.அந்த ஒரு நாளிலாவது உண்மையாக வாழ்கிறோம் என்ற மனநிறைவில் உங்கள் உள்ளங்கள் பட்டாம் பூச்சியாகும்.

By Shameela Yoosuf Ali
2014 April 25th

Thursday, April 24, 2014

A red dream

A red dream photography by Shameela Yoosuf Ali 

Glass dreams

Glass dreams painting by Shameela Yoosuf Ali

A serene lake lay awake....

A serene lake lay awake....
Painting by Shameela Yoosuf Ali
 

I am envious



Shameela Yoosuf Ali

Thinking of the lives of our Grandmothers. It is less complicated. They did not have laptops or mobile phones. There was always ample time to spend with family. They visited the sick, attended all the weddings and always ready to render their hands to the neighbors and needy. 

They were able to concentrate fully on their devotions and never missed a prayer due to a pending assignment.
They went to bed early as there was no late night surfing and waken crisp in the dawn.

Their work was organized and planned without reading the latest tips on time management and productivity.
They always had time to breathe fresh air, listen to the birds, and to gaze at the heavenly night sky.
They were healthy, full of life, vibrant and never made the doctors rich.

I could not help but grow envious.
Is Development actually a curse, my mind is engrossed in a complex battle.

Shameela Yoosuf Ali
2013.July 14th

A mirage from the past


Shameela Yoosuf Ali


I got down from the bus and walked along the famous Akbar bridge of the University of Peradeniya.

It was a misty morning and early birds were twittering. Months after months University doors remained closed because of the never ending strikes. At last University was re opened and here I found myself walking towards my dreams once again.

I have really loved striding out on this bridge. My restless soul would take a stop at the serene view of Mountains across the violet sky. Tall and lavish green wonders would stand spreading their thousand hands taking the breath away. Beneath the bridge, water ran in a miraculously harmonious manner, dawdling silently.

As I was stepping into the bridge I could see monkeys chattering here and there sitting clinging together in the bridge parapets. A young couple was taking self photographs of them making weird faces.

Suddenly I saw and old rickety bicycle in the farthest end of the bridge. As I drew closer I saw him clearly. An old man clad in a partially torn shirt and worn out sarong. He was trying to tie up a bundle of wooden logs into the carrier of the bicycle.

Each time he tried a log or two dropped breaking the stillness of the atmosphere.

I felt sorry for him. A debate emerged from nowhere Me vs Me.
Why should I bother, I am a woman and there are men around and compared to me they are physically stronger.

I am clad in my long black coat neatly pressed and this offering to help might ruin my whole attire.

He is not a Muslim, is he?

What a string of inhuman thoughts. I abruptly cut short my mental conversation and turned. I had almost passed that weak soul - who stood like a mirage from the past.

I saw his fingers, they were trembling with feebleness. He does not resemble my father at all but something in him reminded me of my father.

He Should be a father of someone yet I saw my father in him.

“Uncle, May I help you’

He lifted his glance from the wooden logs in bewilderment.

No, No Madam, you would get late ‘

I picked the fallen logs one after one and brought together at the bicycle carrier .

I held the logs for him to tie up. That was the least I could do.

He did not say ‘Thank you’ to me but I felt something more than that in his wrinkled face.

A saying of prophet Muhammed flashed across my mind.

Anas bin Malik (May Allah be pleased with him) reported: Messenger of Allah (peace be upon him) said, "If a young man honors an older person on account of his age, Allah appoints someone to show reverence to him in his old age"[At-Tirmidhi].

I turned and walked with my heart full of butterflies of contentment. Alahmdulillah.

2012.09.13

Real life vs Face book -- What you think?

Shameela Yoosuf Ali

There would be a new discipline named as 'Face book Psychology' to be introduced to Universities soon.

The person who is talkative can be a quite ghost in Face book, while the most timid person can be a blabbermouth in face book.

"Facebook addiction disorder" which is fondly known as FAD is truly a recent sensation in Social Psychology. Experts now confirm that 1 out of every 5-6 users are now addicted to Facebook.
"Facebook Addiction Disorder" is coined by a researcher Dr. Michael Fenichel, and it is defined by hours spent on Facebook; spent in such a way that the healthy balance in the person’s life is adversely affected, leading to problems like mental stress and depression.

Let us think for a second…

2013.May 8

Thousand stars


 Shameela Yoosuf Ali


As this day crawls into the night
Thousand stars fall into my soul
I level to the ground and shed a tear
Trails of feathery dreams take a turn
Into a lonely road of Scorching sun.

I walk with grace and elegance
All grown up and complete

Yet, a part of me perhaps the whole
fights within stubborn and persistent

Never wanting to grow up at all.





2012.11.04
On my birth day
11.58 pm

Invisible fence


Shameela Yoosuf Ali



Shackled are my hands by Thousand and one chains
Invisible and obscure...

Dreams dwell behind the bars of a prison
Discolored and crouched...

Burdened spirit of mine is no more the abode of tranquility
My eyes could glare but fences and hurdles...

Forbidden are the melodies of daffodils fondling in the breeze
And the smell of coffee beans bruised in the crusher…
My breathing is coarse and foreign
Heeding the footsteps of the soul treading out from the core.

Out of the blue…

Unlocked was a chamber within me
Right away I set eyes on the world through that hole
Beneath my dreams was the sky boundless and stretched out
And the soul returned to the core, so serene and tranquil.


2011.09.05