Saturday, May 31, 2014
காசு சம்பாதிக்கும் பெண் திமிர்கொண்டவள் – சில பகிர்வுகள்
Shameela Yoosuf Ali
பெண் உழைக்கலாமா கூடாதா என்று கருத்து வேறுபாடுகளைத் தாண்டி உலகம் வளர்ந்து மிக நீண்ட காலமாயிற்று.
ஒரு முஸ்லிம் பெண் காசுக்கு வேலை பார்த்தல் ஆகுமா என்ற ஐயம் இன்னும் சிலரது உள்ளத்தில் இல்லாமல் இல்லை.
பணிபுரிதல் என்பது அத்தியாவசியமான போது மட்டுமே என்று பரவலாகச் சொல்கிறார்கள்.அத்தியாவசியமா அநாவசியமா என்பதை அந்தப் பெண்ணும் அவள் சார்ந்த குடும்பமும் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
ஒரு துறையில் தேர்ச்சி பெற்ற பெண், அந்தத் துறைக்கான பங்களிப்பை வழங்கியாக வேண்டியது அவசியம்;அதற்கான ஏற்பாடுகளை அவளது குடும்பமும் சமூக அமைப்பும் செய்து ஆக வேண்டும்.
குடும்பத்தை ஒழுங்காகப் பராமரித்து முடித்த பின்னர் தான் தொழிலுக்குச் செல்லாம் என்று பலர் கூறலாம்.குடும்பத்தைப் பரமாரிப்பது என்பது இடையறாத ஒரு வேலை.அதில் மனைவிக்கு மட்டுமல்ல கணவனுக்கும் பங்கிருக்கிறது என்பது புரிதலுக்குரியது.
குடும்பத்தையும் தொழிலையும் ஒரே நேரத்தில் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. ஒரு குடும்பம் என்றால் ஆயிரமிருக்கும்.அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருவரது வேலையை இன்னொருத்தர் செய்ய உதவலாம். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது.
இப்போதெல்லாம் ஒரு தேநீர் ஊற்றக் கூட தெரியாது என்று கணவர் ஒதுங்குவதும்,ஒத்தாசை செய்வதை அவமானமாகக் கருதுவதும் ஒரு பெருமையாகி விட்டிருக்கிறது.
எல்லாப் பெண்களும் வேலை செய்ய வெளிச்செல்லத் தான் வேண்டும் என்பதில்லை.வீட்டிலிருந்து கூட பணிபுரியலாம். தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள விரும்பும் மகளிரும் தனக்கென்றோரு பொருளாதார சுதந்திரத்தை ஆசிப்பவர்களும் தொழில் செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது.
தொழில் செய்யும் போது வரையறைகள் இருக்கின்றதே என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது; ஹலாலான தொழில்,நேர்மை,நம்பிக்கை மற்றும் நாணயமாக நடந்து கொள்தல் போன்றவை தொழில் செய்யக்கூடிய அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய வரையறைகள் தான்;அதில் இரு கருத்துக்கு இடமில்லை.மற்றப் படி இஸ்லாம் கூறுகின்ற அழகிய வாழ்வியலை நடைமுறைப்படுத்துவது பணிபுரிவதற்காக வெளிக் கிளம்பும் போது மட்டுமல்ல ,வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் கடைப்பிடிக்க வேண்டியதாகும்.
இஸ்லாமிய வரலாற்றின் தாய் அன்னை கதீஜா(ரலி) அவர்கள் மிகப்பெரும் வர்த்தகத்தை கொண்டு நடாத்திய ஒரு வெற்றிகரமான வியாபாரத் தலைவி(Business Woman).நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு உறுதுணையாய் இன்னுமொரு தோளாய் இருக்க அந்தத் தொழில் அவருக்கு தடையாக இருக்கவில்லை;மாற்றமாக தன் செல்வம் கொண்டு துணைவரை திடப்படுத்துபவராகவே அவர்கள் இருந்தார்கள்.
காசு சம்பாதிக்கும் பெண் திமிர்கொண்டவள் என்று கருத்து சமூகத்தில் இருக்கிறது.நான்கு காசு சம்பாதித்தால் தலை கால் புரியாது;கணவனை மதிக்க மாட்டாள் என்ற அநாவசியமான பயங்களும் இல்லாமலில்லை.காசு சம்பாதிக்காமலே ஆணவம் கொள்ளும் பெண்களும் மதிக்காத மகளிரும் தாரளமாய் இருக்கிறார்கள்.இவை தனிமனித இயல்பு சார்ந்த பண்புகள் மாத்திரமே.
வீட்டிலிருந்தோ வெளியில் சென்றோ தனது கையால் உழைப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது;இறைவனுக்காக நேர்மையாக உழைக்கும் போது காசுக்கு மேலால் ஒரு ஆத்ம திருப்தி ஆட்கொள்கிறது. தன் காலில் நிற்கும் போது தன்னம்பிக்கை வளர்கிறது.
தன் பெற்றோருக்கு ஏதாவது தன் காசால் வாங்கிக் கொடுக்கும் சந்தோஷம் வேறு;கணவன் காசிலிருந்து வழங்குவது வேறு.
நினைக்குப் போதெல்லாம் தருமம் செய்யவும் சமயங்களில் கணவனுக்கும் வீட்டுக்கும் செலவளிக்கவும் ,நண்பிகள் உறவினர்களுக்கு சின்னப் பரிசுகள் வழங்கவும்,தனக்குத் தேவையான சில பொருட்களை சுயமாகவே வாங்கிக் கொள்ளவும், தன் திறமைகள் உபயோகப்படுவதற்கான வாய்ப்புக் கிடைப்பதும் உழைக்கும் பெண்ணின் சிறு மகிழ்ச்சிகள்.
பல ஆண்களைக் கூட ஒரு பெண் நிர்வகிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் அவர்கள். அன்றைய காலகட்டத்தில் மதினா ஒரு மாபெரும் வணிக மையமாகத் திகழ்ந்தது. உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் மதீனத்துச் சந்தைக்கு ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் அவர்களை தலைவராக நியமித்தார்கள். ஷிஃபா (ரலி) அவர்கள் அதிக அறிவுக் கூர்மையுடையவர் மற்றும் தூர சிந்தனையுடையவர். அவரது ஆலோசனைகள் உமர்(ரலி) அவர்களுக்குப் பலசமயங்களில் உதவிகரமாக அமையப்பெற்று அதிக லாபத்தையும் ஈட்டித்தந்தன.
பெண்களின் பங்களிப்பின்றி மீண்டுமோர் மதீனா பற்றிக் கனவு கூடக் காண முடியாது.சிந்தனைகளை அகலப்படுத்துவோம்.
By Shameela Yoosuf AliEngal Thesam 2014
Friday, May 23, 2014
Thursday, May 22, 2014
பல்லின சமூகமும் முஸ்லிம் பெண்களும் – சில ஆலோசனைகள்.
Shameela Yoosuf Ali
1. இஸ்லாத்தைநான் தான் சரியாகப்பின்பற்றுகிறேன்;எனக்குத்தான் தெளிவாக இஸ்லாம் தெரியும் என்ற அகம்பாவத்தைமுதலில் தூக்கியெறியுங்கள்.சில சிந்தனைகள் எமக்கு முரண்பட்ட கருத்துக்களாகத் தோன்றும்போதிலும் சரியானவையாக இருக்கலாம் என்பதனை கவனத்திற் கொள்ளுங்கள்.
2. ஹிஜாப்ஆடையை ஏன் அணிகிறோம் என்பதில் தெளிவு அவசியம்.ஹிஜாப் என்பது எமது சூழல், கால நிலை,அமைவிடம்,தொழில், தனித்துவம் சொந்த விருப்பு வெறுப்பிற்கிணங்க மாறுபடலாம்;ஹிஜாபின்நோக்கத்தினை நிறைவேற்றும் எந்த உடையையும் நீங்கள் அணியலாம். யாருக்கேனும் பயந்து உங்களுடையஉடையின் நிறந்தையோ அல்லது அமைப்பையோ மாற்றுவது அல்லது மாற்றாமலிருப்பது அவசியமற்றது.
3. நீங்கள்தனித்துச் சென்றாலும் கூட்டாகச் சென்றாலும் உங்களுடைய பாதுகாப்பையும் கண்ணியத்தையும்உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.குறிப்பாக நீங்கள் ஹிஜாப் அணிந்திருப்பதால் உங்களுக்குபாலியல் ரீதியான தொந்தரவுகள் நிகழாது என்பதற்கான உத்தரவாதம் கிடையாது, முன் யோசனையோடுநடந்து கொள்ளுங்கள்
4. வீண்சந்தேகங்களையும்வெறுப்பையும் சம்பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.
5. அந்நியமதங்களின் புனிதஸ்தலங்களையும் மதத்தலைவர்களையும் எங்கேயும் எப்போதும் கண்ணியப்படுத்தமறக்க வேண்டாம். இது நபியவர்களின் வழி என்பது நினைவிருக்கட்டும்.
6. அடுத்தவர்களுக்குஉதவி உபகாரம் செய்வதில் முந்திக் கொள்ளுங்கள். கீழே விழுந்த பொருளொன்றை எடுத்துக் கொடுப்பதுபோன்ற சிறிய உதவியாக இருந்த போதிலும் சரியே. உபகாரம் செய்யும் போது இனத்தையோ மதத்தையோமனதில் கொள்ள வேண்டாம்; முஸ்லிம் என்பதற்காக முன்னுரிமை கொடுக்கவும் வேண்டாம்; அதிகதேவையுடையவருக்கே முதல் கவனம் கொடுப்பது வரவேற்பிற்குரியது.
7. தஃவாஎன்ற பெயரில், அந்நியச் சகோதர சகோதரிகளை அடிக்கடி தொந்தரவு பண்ணுவதையும் உபதேசம் பண்ணிஎரிச்சலூட்டுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
8. குற்றங்கள்நடக்கும் போது, முஸ்லிங்களிடையே நடக்கும் போது அதற்கொரு விளக்கமும் இன்னொரு இனக்குழுவிடையேநடக்கும் போது இன்னொரு புரிதலும் கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில்இறைவன் நீதியாளன்.
9. எப்போதும்நீதிக்காகக் குரல் கொடுங்கள்; எமது சமூகத்துக்கெதிரான இன்னொரு தனிமனிதனுடைய உரிமையாகஇருந்தாலும் நியாயத்திற்கே முதலிடம் வழங்குங்கள்.
10. விமரிசனங்களைக் கண்டு பொங்கியெழாதீர்கள்.அவைஎம்மை செதுக்குவன; அவற்றை அறிவுபூர்வமாக அணுகுங்கள்.பிழை எம்மிடம் எனில் தயக்கமின்றிஏற்றுக்கொள்ளும் விசாலமான உள்ளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
11. பிறமதத்தவ்ர்களிடம் நேசம் காட்டும் போதுஅது உண்மையானதாக இருக்கட்டும்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இயல்பு, இஸ்லாத்திற்குமுரணானது.அன்பிற்கு வேறு நோக்கம் வேண்டியதில்லை ; சில இலாபங்களை அல்லது மறைவான நிகழ்ச்சிநிரலைவைத்துக் கொண்டு கருணை காட்டுவதை விட அன்பு காட்டாமலிருப்பது மேலானதாகும்.
12. இயல்பாக இருங்கள்; செயற்கையாக இராமல் உங்கள்தனித்துவத்தோடு இருங்கள்.உங்கள் உடை குறித்தோ அல்லது உங்களது அடையாளம் குறித்தோ வெட்கப்படாதீர்கள்;பெருமைப்படுங்கள்.
13. ‘இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்’ கிழக்கோமேற்கோ இஸ்லாமே சிறந்தது’ ‘முஸ்லிமாய் இருப்பதை இட்டுப் பெருமைப்படுகிறேன்’ போன்ற வாசகங்கள்உங்கள் மனதில் இருக்கட்டும்,தயவு செய்து சமூக ஊடகத்தளங்களில் இவற்றை பதிவு செய்து மற்றவர்களின்உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்; அது இஸ்லாத்தின் நடைமுறையும் அல்ல.
14. நிறைவாகச் செவிமடுங்கள்; குறைவாகப் பேசுங்கள்; உங்களைசுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.இன்று செய்திகளை நீங்கள்அடையும் காலம் போய் செய்திகள் உங்களை வந்தடையும் காலம். தெரிந்து கொள்ளுங்கள்.
15. நான் என் குடும்பம் என்ற வட்டம் தாண்டி,சமூக விவகாரங்களில் ஆர்வம் காட்டுங்கள்.உங்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வகையிலானபங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்க மறக்க வேண்டாம்.
சமீலா யூசுப் அலி
by Shameela Yoosuf Ali
26 April 2013
எங்கள் தேசம் 2013
Tuesday, May 20, 2014
இரவுகள் விரும்பப்படுகின்றன.
Shameela Yoosuf Ali on Face book
ஒரு களைப்பூட்டும் நாளின் கரையோரம் இரவு.
நாள் முழுதும் சக்கரமோடிய ஒரு பெண்இரவின் மடியிலாவது கண்ணயர முயற்சிக்கிறாள்.
அவமானங்கள் கூர்முள்ளாய் உறுத்திய கணங்கள் இரவுக்குள் பூட்டப்படுகின்றன.
எங்கோ ஓர் மூலையில் ஒரு ஆண் ரகசியமாய் அழுது கொள்கிறான்.
குழந்தைகள் கனவில் சுவர்க்கத்தைக் கண்டு சிரிக்கிறார்கள்.
ஒரு எழுத்து இராட்சசி அப்போது தான் எழுந்து கொள்கிறாள்.
கன்னிப்பெண் வருங்காலக் கணவனைக் கற்பனை செய்கிறாள்.
முதிர்கன்னியோ கன்னத்தின் கடைசி கண்ணீர் கோட்டை இரவின் சுவரில் வரைகிறாள்.
மனித மனதின் ஏமாற்றங்கள் ஒரு தூக்கத்துக்குள் அடங்கிவிடுகின்றன.
இரவு வரும் போது பெருமூச்சுகள் வருகின்றன.
ஏதோ ஒரு நிம்மதியில் இறுக மூடுகின்றன விழிகள்.
2014.May 19
9.47 pm
By Shameela Yoosuf Ali
ஒரு களைப்பூட்டும் நாளின் கரையோரம் இரவு.
நாள் முழுதும் சக்கரமோடிய ஒரு பெண்இரவின் மடியிலாவது கண்ணயர முயற்சிக்கிறாள்.
அவமானங்கள் கூர்முள்ளாய் உறுத்திய கணங்கள் இரவுக்குள் பூட்டப்படுகின்றன.
எங்கோ ஓர் மூலையில் ஒரு ஆண் ரகசியமாய் அழுது கொள்கிறான்.
குழந்தைகள் கனவில் சுவர்க்கத்தைக் கண்டு சிரிக்கிறார்கள்.
ஒரு எழுத்து இராட்சசி அப்போது தான் எழுந்து கொள்கிறாள்.
கன்னிப்பெண் வருங்காலக் கணவனைக் கற்பனை செய்கிறாள்.
முதிர்கன்னியோ கன்னத்தின் கடைசி கண்ணீர் கோட்டை இரவின் சுவரில் வரைகிறாள்.
மனித மனதின் ஏமாற்றங்கள் ஒரு தூக்கத்துக்குள் அடங்கிவிடுகின்றன.
இரவு வரும் போது பெருமூச்சுகள் வருகின்றன.
ஏதோ ஒரு நிம்மதியில் இறுக மூடுகின்றன விழிகள்.
2014.May 19
9.47 pm
By Shameela Yoosuf Ali
My book in print -Ethnic Conflict has a Military Solution.
If we think that we can suppress the voice of Tamil speaking community by defeating
LTTE militarily, we are wrong.
Shameela Yoosuf Ali
Alhamdulillah.
Having your work in print on a Sunday Morning would make you jump out with excitement.
You can order @ http://www.amazon.ca/Ethnic-Conflict-Has-Military-Solution/dp/1497588111
................................................................................
If we think that we can suppress the
voice of Tamil speaking community by defeating
LTTE militarily, we are wrong.
It will be an opening to another war.
We should
go for a localized solution with the equal
participation of Sinhalese, Tamils and Muslims
forgetting all other differences.
Tuesday, May 13, 2014
A little girl with a Posy
Shameela Yoosuf Ali
Mountain ranges covered with layers of aromatic tea bushes, Skies painted with an amazing mixture of white and azure blue, the atmosphere disguised in misty veils, you are drawn into an eternal tranquility muted from all the hullabaloo of everyday life.
Illustrative beauty of Nuwereliya can not be expressed in mere words,it is but little piece of heaven indeed.
As you drive through the picturesque hairpin bends, wild blossoms , pine trees and lavish English style cottage houses greet you sideways.
Freezing breezy wind fondles with your hair noiselessly as you pass the lacy flaps of water, falling down amid the slumbering rocks.
Suddenly a small girl with a posy of flowers appears from nowhere like a dream.
The small girls and boys carrying flower posies trying to stop the vehicles are a common sight in this belt.
As this naive girl posed to my camera, with all smiles and a posy in her hands, some where down my heart I was feeling guilty. With her tender looks and innocence she seemed like any 8 year old child. But her hands were quite rough revealing the untold story of hardships, hitches and struggles.
I just pray that this smile should always remain, chaste and beautiful throughout her life.
Of course, mean time we can talk about Social change, Child Rights and Child Labour on our leisure in deluxe conference halls over a coffee.
by Shameela Yoosuf Ali
2014 May 13th
Saturday, May 10, 2014
அன்பும் காலமும்
Shameela Yoosuf Ali
முன்னொரு காலத்தில் ஒர் அழகிய தீவொன்றிருந்தது.அங்கு துக்கம்,சந்தோஷம்,அறிவு,அன்பு மற்றும் மற்ற உணர்வுகளும் வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் ஒரு திடீர் அறிவித்தல். அந்தத்தீவு மூழ்கப்போகிறது என்ற அதிர்ச்சித் தகவல். எல்லா உணர்வுகளும் தங்களுக்கென்று தனியான கட்டுமரம் அல்லது தோணிகளை நிர்மாணித்து அங்கிருந்து வெளியேறத் துவங்கின.
ஆனால் அன்பு வெளியேற மறுத்து விட்டது.கடைசித் தருணம் வரை அங்கிருக்க வேண்டும் என்பதே அதன் ஆசை. எல்லா உணர்வுகளும் வெளியேறி விட அன்பு மட்டுமே எஞ்சியிருந்தது.
தீவு மூழ்கத் தொடங்கியது.கடைசியாக அன்பு தன் மற்றைய நண்பர்களிடம் உதவி கேட்போம் எனத் தீர்மானித்தது.
‘செல்வச்செழிப்பு’ மிகப்பாரியதோர் சொகுசுக் கப்பலில் அன்பைக்கடந்து சென்றது
“செல்வச்செழிப்பே, என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயா? அன்பு கேட்டது.
‘முடியாது,எனது கப்பல் ஏராளமான தங்கம் வெள்ளியினால் நிரம்பியுள்ளது,அதனால் அங்கு உனக்கு இடமில்லை’
‘அன்பு’ என்ன செய்வதென்று யோசிக்கும் போது ‘பெருமை’ மிகுந்த அழகானதோர் தோணியொன்றில் வந்தது.
‘பெருமையே,தயவு செய்து எனக்கு உதவி செய்’ அன்பு கெஞ்சியது.
‘அன்பே, எனக்கு உதவி செய்ய முடியாது, நீ நனைந்திருக்கிறாய், நீ என் தோணியை நாசமாக்கி விடுவாய்’ பெருமை பதிலளித்தது.
‘துக்கம்’ அருகில் வந்தது. அன்பு கேட்டது ‘ துக்கமே, நான் உன்னுடன் வருகிறேன்’
‘ஓ அன்பே, நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன், நான் தனியாக இருந்தாக வேண்டும், உன்னை அழைத்துச் செல்ல முடியாது.”
துக்கமும் மறுத்து விட்டது.
‘சந்தோஷம்’ அன்பைக் கடந்து சென்றது. ஆனால் அது தாங்க முடியாத உற்சாகத்துள்ளலில் இருந்ததால் அன்பு கூப்பிடும் குரலைக் கேட்கவேயில்லை.
திடீரென ஒரு குரல்.
‘அன்பே, இங்கு வா, நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்’ அது வயதில் முதிர்ந்தது. கரைபுரண்டோடிய மகிழ்ச்சியும் குதூகலத்திலும் அன்பு எங்கே போகிறோம் என்பதைக் கூட கேட்க மறந்து விட்டது.கரை தட்டி விட்டது, அன்பை விட்டு விட்டு அந்த முதிர்ந்த உருவம் சென்று விட்டது.
அன்பு மிகவும் முதிர்ந்திருந்த அறிவிடம் கேட்டது ;எனக்கு உதவி செய்தது யார்?’
அது தான் ‘காலம்’ அறிவு பதிலளித்தது.
‘காலமா? ‘ அன்பு ஆச்சரியப்பட்டது.
ஆழ்ந்த சிந்தனையுடன் ‘அறிவு’ சொன்னது ‘ காலம் ஒன்று மட்டுமே அன்பின் விலைமதிப்பில்லாப் பெறுமதியை உணர்ந்திருக்கிறது’
ஆங்கிலத்தில் யாரோ
தமிழில் சமீலா யூசுப் அலி
2013.June 11th
Friday, May 9, 2014
Visit to the Temple
Visit to the Temple painting by Shameela Yoosuf Ali |
A basket full of apples
A basket full of apples painting by Shameela Yoosuf Ali |
Wednesday, May 7, 2014
Rising Water
Rising water -painting by Shameela Yoosuf Ali |
Tuesday, May 6, 2014
இல்லாமல் போன ஏதோ ஒன்று.
Shameela Yoosuf Ali
இரவினில் வைத்து,அரைவாசி முகத்திலும் அப்பியிருக்க விழிக்கும் , நுணி விரல்களில் ரத்தமாய் சிவக்கும் அரைத்த மருதாணியின் மகிழ்ச்சி,கடையில் வாங்கி உள்ளங்கையில் வைத்த உடனே சிவக்கும் உடனடி மருதாணியில் வராமல் போகிறது.
பிள்ளைப் பருவத்தில் சீத்தைத் துணியில் உம்மா தைக்கும் சட்டை அணியும் போது கிளர்ந்தெழும் பெருநாள் குதூகலம், பல ஆயிரங்கள் கொண்டு பட்டாய் நெகிழும் விலையுயர் ஆடையை நேர்த்தியாய் அணிகையில் கிடைப்பதில்லை.
அரைகுறை வெளிச்சத்தில் ரொட்டியைத் துண்டு துண்டாய்ப் பிய்த்து ,சுடு இறைச்சியும் ஆணமுமாய் மணக்கத் தின்றதன் ஆனந்தம் குளிரூட்டிய உணவகத்தில் பக்குவமாய் படைக்கும் வகை வகை உணவுகள் முள்கரண்டியால் உட்கொள்கையில் இல்லாமலாகி விடுகிறது.
காற்றுப்படபடக்க மழைத்துளிகள் வர்ஷிக்க இனிக்கப் பறக்கும் இருசக்கர மோட்டார்ப் பயணம் போல் வாய்ப்பதில்லை ஆடம்பர வாகனத்தில் காற்றுப்புகா உள்ளுக்குள் சொகுசு இருக்கைப் பயணம்.
நிலாக்கால முன்னிரவில் ஆற்றுக் கல்லில் கதகதப்பில் நண்பியும் நானுமாய் வானம் பார்த்து படுத்துக் கிடந்த நட்சத்திரங்கள், கட்டிடடங்கள் புடை சூழ மொட்டை மாடியில் உட்கார்ந்து நிலாப் பார்க்கும் போது காணவில்லை.
மொத்தத்தில் அதிகம் இல்லாமல் இருந்த போது இருந்த ஏதோவொன்று ,அதிகம் இருக்கிற போது இல்லாமல் போகிறது என்பதைத் தெளிவாக உணர்கிறேன்.
By Shameela Yoosuf Ali
2014 May 6th
Saturday, May 3, 2014
A lonely tree in winter
A Lonely Tree in Winter -painting by Shameela Yoosuf Ali |
Friday, May 2, 2014
Love and Peace
Love and Peace painting by Shameela Yoosuf Ali |
Subscribe to:
Posts (Atom)