Monday, April 28, 2014

வாங்கிக் கட்டியதுண்டா?



Shameela Yoosuf Ali 

யாருக்கேனும் வலிந்து உதவி செய்யப் போய் வலிக்க வலிக்க வாங்கிக் கட்டிய அனுபவம் உண்டா?

உங்கள் நல்லெண்ணம் தப்பாகப் புரியப்பட்டு உறவையே முறித்துக் கொண்ட கதைகள் உண்டா?

ஒருவரது நல்வாழ்விற்காக மட்டுமே பிரார்த்தித்த உங்கள் உள்ளம் அவருக்கெதிராகச் செயற்பட்டதாய் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட தருணங்கள் உண்டா?

வலிக்கும்;நிச்சயம் வலிக்கும்.
பிறர் நலம் நோக்கிய வாழ்தல் வலிக்கும்.

உங்கள் இலட்சியம் நோக்கிய கடும் பாலைப் பயணத்தில் ,சுடும் பாதங்களுக்கு இந்த வலிகள் தான் சுடாத பாதணிகளாகும். மறந்து விடுங்கள்;மன்னித்து விடுங்கள்.

உங்கள் உள்ளத்தில் சுமக்க ஆயிரம் அற்புதங்கள் காத்திருக்கும் போது கால் தைக்கும் சிறுமுள்ளைப் பற்றிய கவலைக்கு இடமேது.

By Shameela Yoosuf Ali
April 28th 2014

No comments:

Post a Comment