Thursday, May 22, 2014

பல்லின சமூகமும் முஸ்லிம் பெண்களும் – சில ஆலோசனைகள்.





Shameela Yoosuf Ali

1. இஸ்லாத்தைநான் தான் சரியாகப்பின்பற்றுகிறேன்;எனக்குத்தான் தெளிவாக இஸ்லாம் தெரியும் என்ற அகம்பாவத்தைமுதலில் தூக்கியெறியுங்கள்.சில சிந்தனைகள் எமக்கு முரண்பட்ட கருத்துக்களாகத் தோன்றும்போதிலும் சரியானவையாக இருக்கலாம் என்பதனை கவனத்திற் கொள்ளுங்கள்.

2. ஹிஜாப்ஆடையை ஏன் அணிகிறோம் என்பதில் தெளிவு அவசியம்.ஹிஜாப் என்பது எமது சூழல், கால நிலை,அமைவிடம்,தொழில், தனித்துவம் சொந்த விருப்பு வெறுப்பிற்கிணங்க மாறுபடலாம்;ஹிஜாபின்நோக்கத்தினை நிறைவேற்றும் எந்த உடையையும் நீங்கள் அணியலாம். யாருக்கேனும் பயந்து உங்களுடையஉடையின் நிறந்தையோ அல்லது அமைப்பையோ மாற்றுவது அல்லது மாற்றாமலிருப்பது அவசியமற்றது.

3. நீங்கள்தனித்துச் சென்றாலும் கூட்டாகச் சென்றாலும் உங்களுடைய பாதுகாப்பையும் கண்ணியத்தையும்உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.குறிப்பாக நீங்கள் ஹிஜாப் அணிந்திருப்பதால் உங்களுக்குபாலியல் ரீதியான தொந்தரவுகள் நிகழாது என்பதற்கான உத்தரவாதம் கிடையாது, முன் யோசனையோடுநடந்து கொள்ளுங்கள்

4. வீண்சந்தேகங்களையும்வெறுப்பையும் சம்பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.

5. அந்நியமதங்களின் புனிதஸ்தலங்களையும் மதத்தலைவர்களையும் எங்கேயும் எப்போதும் கண்ணியப்படுத்தமறக்க வேண்டாம். இது நபியவர்களின் வழி என்பது நினைவிருக்கட்டும்.

6. அடுத்தவர்களுக்குஉதவி உபகாரம் செய்வதில் முந்திக் கொள்ளுங்கள். கீழே விழுந்த பொருளொன்றை எடுத்துக் கொடுப்பதுபோன்ற சிறிய உதவியாக இருந்த போதிலும் சரியே. உபகாரம் செய்யும் போது இனத்தையோ மதத்தையோமனதில் கொள்ள வேண்டாம்; முஸ்லிம் என்பதற்காக முன்னுரிமை கொடுக்கவும் வேண்டாம்; அதிகதேவையுடையவருக்கே முதல் கவனம் கொடுப்பது வரவேற்பிற்குரியது.

7. தஃவாஎன்ற பெயரில், அந்நியச் சகோதர சகோதரிகளை அடிக்கடி தொந்தரவு பண்ணுவதையும் உபதேசம் பண்ணிஎரிச்சலூட்டுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

8. குற்றங்கள்நடக்கும் போது, முஸ்லிங்களிடையே நடக்கும் போது அதற்கொரு விளக்கமும் இன்னொரு இனக்குழுவிடையேநடக்கும் போது இன்னொரு புரிதலும் கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில்இறைவன் நீதியாளன்.

9. எப்போதும்நீதிக்காகக் குரல் கொடுங்கள்; எமது சமூகத்துக்கெதிரான இன்னொரு தனிமனிதனுடைய உரிமையாகஇருந்தாலும் நியாயத்திற்கே முதலிடம் வழங்குங்கள்.

10. விமரிசனங்களைக் கண்டு பொங்கியெழாதீர்கள்.அவைஎம்மை செதுக்குவன; அவற்றை அறிவுபூர்வமாக அணுகுங்கள்.பிழை எம்மிடம் எனில் தயக்கமின்றிஏற்றுக்கொள்ளும் விசாலமான உள்ளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

11. பிறமதத்தவ்ர்களிடம் நேசம் காட்டும் போதுஅது உண்மையானதாக இருக்கட்டும்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இயல்பு, இஸ்லாத்திற்குமுரணானது.அன்பிற்கு வேறு நோக்கம் வேண்டியதில்லை ; சில இலாபங்களை அல்லது மறைவான நிகழ்ச்சிநிரலைவைத்துக் கொண்டு கருணை காட்டுவதை விட அன்பு காட்டாமலிருப்பது மேலானதாகும்.

12. இயல்பாக இருங்கள்; செயற்கையாக இராமல் உங்கள்தனித்துவத்தோடு இருங்கள்.உங்கள் உடை குறித்தோ அல்லது உங்களது அடையாளம் குறித்தோ வெட்கப்படாதீர்கள்;பெருமைப்படுங்கள்.

13. ‘இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்’ கிழக்கோமேற்கோ இஸ்லாமே சிறந்தது’ ‘முஸ்லிமாய் இருப்பதை இட்டுப் பெருமைப்படுகிறேன்’ போன்ற வாசகங்கள்உங்கள் மனதில் இருக்கட்டும்,தயவு செய்து சமூக ஊடகத்தளங்களில் இவற்றை பதிவு செய்து மற்றவர்களின்உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்; அது இஸ்லாத்தின் நடைமுறையும் அல்ல.

14. நிறைவாகச் செவிமடுங்கள்; குறைவாகப் பேசுங்கள்; உங்களைசுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.இன்று செய்திகளை நீங்கள்அடையும் காலம் போய் செய்திகள் உங்களை வந்தடையும் காலம். தெரிந்து கொள்ளுங்கள்.

15. நான் என் குடும்பம் என்ற வட்டம் தாண்டி,சமூக விவகாரங்களில் ஆர்வம் காட்டுங்கள்.உங்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வகையிலானபங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்க மறக்க வேண்டாம்.

சமீலா யூசுப் அலி

by Shameela Yoosuf Ali
26 April 2013
எங்கள் தேசம் 2013

No comments:

Post a Comment