Friday, July 4, 2014

ஏழையும் எளிமையும் – என் நோன்பு கால டயறி


Shameela Yoosuf Ali

ரமழான் தூங்கிய இதயங்களை தட்டியெழுப்பி இயங்கச் செய்ய வந்ததோர் இனிய கரம்.

ரமழானின் நன்மைகளின் உள்ளீடு.

ஒட்டிய வயிறுகளின் சோகம் அறிய இறையவன் தந்ததோர் அனுபவப் பயிற்சி.

இறைச்சிக் கஞ்சி,அகம் குளிர பாலுதா,எண்ணெய்யில் பொரித்தெடுத்த இரண்டு மூன்று வகை சிற்றுண்டிகள்,பேருக்கு ஈத்தம் பழம்,வகை வகையான பழசாலட்கள் இன்னோரன்னவை.

இரவுச் சாப்பாடு அவித்தெடுத்த இடியப்பம்,கிழங்குச் சொதி இறைச்சி ஆணம் கமகமக்க சின்ன மிளகாய் அரைத்த சம்பலுடன் உள்ளிறங்கும்.சூடாயொரு கோப்பி வேறு.

சஹர் நேரமோ தாளித்த சோறு,சீரகம் மணக்கும் கோழிக்கறி,வதக்கிய மரக்கறி,மணக்கும் பருப்பு,பொரித்த இறைச்சி இன்னும் இன்னும் பட்டியல் நீளும்.தயிரில்லாமால் சஹர் உணவு செரிக்குமா.வெண்ணெய்யாய் உருகும் தயிருக்கு மேல் கித்துள் பாணி விட்டு வாழைப்பழமும் வெட்டிப்போட்டு உண்ணும் கலை.ஏப்பம் விட்டுக் கொண்டே இன்னுமொரு ஏலக்காய் டீ.

ஏழைகளில் பசியறியும் மாதம் என்று யார் சொன்னார்கள்?
விதவிதமாய் புசிப்பதற்கல்லவா பழகி வைத்திருக்கிறோம்.

மாத இறுதியில் செலவும் இடிக்கும்;மற்ற மாதங்களை விட செலவு இருமடங்கு; குடும்பத்தலைவர் தலையில் அடித்துக் கொள்ளாத குறை.

நோன்பு வைத்து இரண்டு சுற்றுப் பெருத்துப் போன உடல்களை கண்ணாடியில் பார்த்து ஏங்கிக் கொள்ள வேண்டியது தான்.

அடர்த்தியான் சாப்பாடு அதிக தூக்கத்தைக் கொண்டு வரும்.உடல் களைத்துப் போக அல்லாஹ்வுக்காய் நின்று வணங்கலும் நீளமாய் ஓதலும் சோர்வைக் கொண்டு வரும்.

உற்சாகமாய் செய்திருக்க வேண்டிய பணிகள் எல்லாம் மந்தகதியுடன் நகரும்.

மாற்றம் எங்கள் வீட்டிலிருந்து தான் ஆரம்பமாக வேண்டும்.

எளிமையான இப்தார்.

பசி போக்கும் அளவு மட்டுமேயான இரவுணவு;பசிக்காதவர்கள் இரவுணவை தள்ளி வைக்கலாம்.

எண்ணெய்யும் வெண்ணெயும் மிதக்காத அளவான ஸஹர் உணவு.

நிறையத் தண்ணீர்;கொஞ்சம் பழங்கள்.

பெருக்கெடுத்தோடும் உற்சாகம்,உடல் களைக்காத வலிமை,உள்ளத்தின் சுறுசுறுப்பு.

ஏழையில் வலியை கொஞ்சமாவது உ
ணர வைக்கும் உண்மை ரமழான்.

இப்படியொரு நோன்பு வைப்போமா???

சமீலா யூசுப் அலி
July 5, 2014
‪#‎Shameelayoosufali‬ ‪#‎ramadan‬ ‪#‎health‬ ‪#‎ifthar‬

No comments:

Post a Comment