Sunday, May 24, 2015

நான் ஒரு பெண்

எனக்கென்றோர் உலகம் - 4

Shameela Yoosuf Ali

“நான் ஒரு பெண்; இறைவனின் அற்புதமான படைப்பு, இந்த உலகத்துக்கான எனது பங்களிப்பை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.அல்லாஹ்வின் முன் மாத்திரமே நான் சிரம் தாழ்த்துவேன்.மனித சமூகத்தின் ஒருவள் என்ற வகையிலும் இப்பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் ஓரங்கம் என்ற வகையிலும் எனக்கிருக்கும் சுதந்திரத்தையும் பொறுப்புக்களையும் நான் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன்; அவற்றைத் துஷ்பிரயோகம் செய்யாமல் மிகச்சரியாகப் பயன் படுத்த முயற்சி செய்வேன்.என்னை சகோதரியாக,மனைவியாக தாயாக பார்க்க முன் தனிப்பட்ட விருப்புவெறுப்பும் உடம்பும் சதையும் உணர்வுகளும் கொண்ட தனி மனுஷியாகப் பாருங்கள். எனக்கென்று தனியான சிந்தனைப் பாங்கு இருக்கிறது;எனக்கென்று சில எல்லைகள் இருக்கின்றன;எனக்கென்று ஓர் உலகம் இருக்கின்றது. இஸ்லாம் எனக்குத் தந்த உரிமைகளை மரபு,சம்பிரதாயம் என்ற பெயரில் தயவு செய்து மறுதலிக்காதீர்கள்” என தெளிவாக ஒரு பெண்ணால் கூற முடிந்தால் அதற்கேற்ற விதமான வாழ்க்கையும் சுற்றமும் அவளுக்கமைந்தால் அவளை விட அதிஷ்டசாலியான பெண் இருக்க முடியாது.

'எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

சமீலா யூசுப் அலி.

No comments:

Post a Comment