Shameela Yoosuf Ali
வயதாவதைப் பற்றிய பயத்தை மிகைத்து ஒரு விதமான கிளர்ச்சி எழுகிறது; ஏன் எனப் புரியவில்லை.
அடிக்கடி அறுபது வயதுகளுக்குள் மனசு ஓடிப் பிடித்து விளையாடுகிறது.
அருந்ததி ராய் எனக்கு மிகப்பிடித்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரி.
நரைத்த சிகையின் கம்பீரத்தையும் மிடுக்கையும் அவரிடம் முதலில் பார்க்கிறேன்.
முதுமையில் அழகாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்;ஆனால் சுருக்கங்கள் இல்லாத மேனியும் கருகரு சுருள் கூந்தலும் எப்பவும் இருக்க வேண்டும் என்ற பேராசை எல்லாம் கிடையாது.
இன்னோரு காலத்துக்குள் இருந்து கொண்டே நான் வாழ்ந்த காலம் பற்றிய பதிவுகள் எழுதுவதன் இன்பம் சுகிக்கவும்…
வாழ்வின் எல்லைகள்,ஏமாற்றம்,தோல்விகள
மனத்தை இறக்கை கட்டிப் பறக்க விட்டு கடற்கரைக் கருக்கலில் ஏகாந்தமாயொரு கரும் புள்ளியாய் கரைந்து போகுமந்த நிமிடங்களுக்காகவும்…
என் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ வாழ்வின் உயரங்கள் தாண்டிய மனிதனோ மனுசியோ பெருவெளியில் விசிறியிருக்கும் பிரார்த்தனைகளுக்காகவும்…
முதுமையை எந்தவித ஒப்பனைகளும் இல்லாமல் சந்திக்க விரும்புகின்றேன்.
February 15 2015
சமீலா யூசுப் அலி
No comments:
Post a Comment