Sunday, May 24, 2015

பெண்ணின் சமூக வகிபாகம்


எனக்கென்றோர் உலகம் - 6


Shameela Yoosuf Ali

பெண்கள் சுயாதீனமும் தனித்துவமும் அங்கீகரிக்கபடுகின்ற சூழலில் சமூகமாற்றத்தை நோக்கிய புறப்பாடு மிக உறுதியாக நிகழும் இன்ஷா அல்லாஹ்.அப்படியான ஒரு சமூகம் தான் அல்லாஹ்வின் தூதரின் கனவு.ஆண்களும் பெண்களும் இணைந்து செல்லும் பயணத்தில் இருபாலருக்குமே அங்கீகாரமும் சுயநிர்ணய உரிமையும் இன்றியமையாதவை.

இந்த நீள் நெடும் பயணத்திற்கு முன் எங்கள் பார்வையில் ஒரு மாற்றம் அவசியம்.முதலில் பெண்கள் குறித்து கருத்து ரீதியான மாற்றம் நமக்குள் நிகழ வேண்டும்,அது காலவோட்டத்தில் பெண்கள் பற்றிய எமது நடத்தை ரீதியான மாற்றத்தினை நோக்கி எம்மை வழிநடாத்தும்.

"கருத்து ரீதியான் மாற்றம்" என்னுபோது தற்போது சமூகத்தில் பெண்ணின் வகிபாகம் குறித்து நாம் ஒளிவு மறைவின்றிப் பேசவேண்டும். மகள், மனைவி, தாய் என குடும்ப ரீதியான வகிபாகங்கள் நிறையவே பெண்ணுக்கு இருக்கின்றன. சமையல்காரி, ஆசிரியை, வைத்தியர், ஊடகவியளாலர், தாதி, போன்ற ஒரு சில தொழில் சார் வகிபாகங்கள் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் பெண்களுக்கு சமூக ரீதியான வகிபாகம் என்ற ஒன்று இருக்கின்றதா எனக்கேட்டால் பதில் தெளிவானதாக இருக்கப்போவதில்லை; பெண்ணின் சமூகப் பாத்திரம் பற்றிப் பேச தயங்குகின்ற நிலை இருக்கின்றது.மார்க்க அடிப்படைகளின் பிழையான கருத்துப் பெயர்ப்புக்களும் வழி வழியாக வந்த தந்தை வழி சமூகத்தின் ஆதிக்க மனோபாவங்களும் இந்த சிந்தனைக்குழப்பத்தின் வேர்களாக இருக்கக்கூடும்.


எனக்கென்றோர் உலகம் இருக்கிறது'

No comments:

Post a Comment