Friday, September 4, 2015

தேடல்


Shameela Yoosuf Ali

தேடலின் ஒரு ஆயாசப் பொழுதில்
கோடை வாழ்க்கையின் மழைக்கால வர்ஷிப்பாய்
ஆன்மாக்கள் சந்தித்துக் கொள்கின்றன…



ஆன்மாக்களின் உலகம்
கூடுகளுக்குள் படபடக்கும் உயிர்க்குருவிகள்.
கூட்டாய் ஏகாந்தமாய் இன்னொன்றாய் இவ்விரண்டாய்…
அன்பும் வெறுப்பும் காதலும் கனிவும் கோபமும் கலந்து கலந்து…
விருட்சக்கிளைகளில் அந்தமில்லாப் பொழுதொன்றில்
கனவின் சாயல்களாய்
ஒட்டிக் கொண்டிருந்த இறகுகளின் மிச்சம்

பூமி தொட்ட பின்
மறந்திருந்த நினைவுத்துகள்கள்
ஆன்மாக்கள் சந்திக்கும் தேவ விநாடிகளில்…
நிலம் கிளர்த்தி மேலெழும் செடி முளைகளாய்
சர்வ நிச்சயமாக ஞாபகத்துக்கு வருகின்றன.

பிறப்பினை விட வாழ்க்கைக்கு ஆதி வயது
மரணமெனும் பூட்டப்பட்ட வாயிலுக்கு அப்பாலும்
அது விரிந்தே கிடக்கிறது.

சமீலா யூசுப் அலி
2014 Oct 28

No comments:

Post a Comment