Thursday, September 3, 2015

ஆன்ம விசாரணைகள்


Shameela Yoosuf Ali


அவர்கள் வந்தார்கள்;
கதவுகளைத் தட்டினார்கள்.
வழமையான தட்டல் போலயிருந்தாலும் அது வழமையான தட்டல் அல்ல.

சுகநல விசாரிப்புகளுக்குப் பின்னர் எல்லையற்று விரியும் சிந்தனைப் பெருவெளி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

எதுவும் திட்டமிடப்படவில்லை.

புனைவுகள் முலாம்களுக்கு அப்பால் ஆன்மாக்களால் மட்டுமே சிறகடிக்கக் கூடிய காலத் துணுக்கு அது.

ரசம் பொருந்திய திராட்ச்சைகளை விட ஆன்ம விசாரணை போதையூட்டக் கூடியது.

காலத்தின் அடங்காத ஓட்டத்தில் நிதானித்துப் பருகக் கூடிய நீர்ச்சுனைகளுக்கருகே தாமதித்தோம்.

சிறகுகளை விரித்து மேலெழுந்த போது கீழே பூமி புறக்கணிக்கத்தக்க
புள்ளியாய் தெரிந்தது.

விவரிக்க முடியாததோர் வானம் விரிந்திருந்தது.
திடீரென பயணம் அறுந்தது.

சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டிருந்தார்கள்,
அழகான முலாம் பூசிய வார்த்தைகள் மட்டும் மூலையில்
அறுந்த செருப்புகளாய் கிடந்திருந்தன.

பொய்களூடு ஒளிந்திருக்கும் உண்மை
நிர்வாணமாய்த் தான் இருக்கிறது.

By Shameela Yoosuf Ali
2014 Sep 19th

No comments:

Post a Comment