Monday, August 31, 2015

காலங்களுக்கு அப்பால்… Beyond the Bygone



- A Gold winning poem AllPoetry

By Shameela Yoosuf Ali


நெறிக்கப்பட்ட சிந்தனைகளும் கசங்கிய கனவுகளும்
முடிவுறா ஒளி கொண்ட என் ஆன்மா சபிக்கப்பட்டிருக்கிறது.
வழமையான மூலைகளில் என்னைக் கட்டி விடாதீர்கள்…
நான் இரவின் நட்சத்திர ஓடைகளில் கிடக்கும் போது.

வானத்தின் வளைவில் தாரகைகள் சுவாசிக்கும் போது
அடரிருளில் நான் என் தேடலின் செடியை நடுகின்றேன்…

தங்கமும் வெள்ளியும் கொண்டமையினும்
கைவிலங்குகள் இன்னும் என் கனவுகளின் முற்றுப்புள்ளியே.
கடும்பச்சை நிறத்தில் கரையிலா சமுத்திரம்
காலங்கள் தாண்டி விரிகிறது.

நான் எவருக்காகவும் காத்திருக்கவில்லை..
என் இலட்சியம் நோக்கி நடந்திட

சமீலா யூசுப் அலி

No comments:

Post a Comment